(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

48. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ந்து வீணா கேட்ட கேள்வியில் அதிர்ந்துப் போனாள் என்று சொன்னால் அதில் தவறில்லை...!

   

வீணா இவ்வளவு ஈஸியாக உண்மையை கண்டுப்பிடிக்கும் விதத்தில் எதை உளறி வைத்தாள் என்று ஒரே ஒரு வினாடி யோசித்த இந்து, உடனே மனதை மாற்றிக் கொண்டாள்!

   

அவள் சொல்வது தானே பதில்...! எனவே 'இல்லை' என்று சொல்ல வாயை திறந்தாள்... ஆனால், அவள் பேசும் முன் வீணாவே பேசினாள்.

  

"எனக்கும் குழப்பமா தான் இருந்தது இந்து... ஆனால் நீ கீதா அக்கா கிட்ட பேசும் போது தேவையே இல்லாம காஞ்சனா ஆன்ட்டி பத்தி சொன்ன பாரு, அப்போ தான் சின்ன சந்தேகம் வந்துச்சு... இப்போ உன் முகத்துல வந்த ரியாக்ஷன் அது தான் உண்மைன்னும் சொல்லிடுச்சு... என்ன நடந்தது இந்து? ஆன்ட்டியை எங்கே பார்த்த? அவங்க உன் கிட்ட என்ன சொன்னாங்க???"

  

பரிவுடன் வீணா கேட்ட கேள்விகளில் இந்துவின் முகமூடி கழண்டுப் போனது! அது வரை அவள் மறைத்து வைத்திருந்த வருத்தங்கள் கட்டவிழ அவள் முகம் மொத்தமாக மாறிப் போனது!

   

கடந்த சில மாதங்களாக டிப்ரஸ்டாக இருந்தாலும் கூட வீணா இந்துவை இப்படி பார்த்ததில்லை... தோழியின் மன வருத்தம் புரிய, அவளருகில் சென்று, அவளுக்கு ஆறுதலாக முதுகை தடவியவள்,

  

"சொல்லு இந்து! நேத்து ஈவ்னிங் கூட எல்லாம் நல்லா தானே இருந்தது... அப்புறம் என்ன ஆச்சு?" என வினவினாள்!

  

அதற்கு மேல் உண்மையை மறைக்க மனம் வராமல், காஞ்சனாவை சந்தித்தது பற்றி வீணாவிடம் சொன்னாள் இந்து.

  

"நடந்தது எல்லாம் நான் எதிர்பார்த்த மாதிரியே தான் இருக்கு... ஆனால், காஞ்சனா ஆன்ட்டிக்காக நீ எதுக்கு சஞ்சீவை விட்டுக் கொடுக்கனும் இந்து???"

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.