தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 21 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்தின் மன்னிப்பை ஏற்காதவளாக அவனை கோபத்துடன் பார்த்தாள் ஆர்த்தி.
“உங்களுக்கு என் பர்த்டே என்னைக்குன்னு தெரியும்னு சொன்னீங்களே?”
“அது அது...” என விக்கிராந்த் இழுக்கவும்,
“பொய் தானே சொன்னீங்க?” ஆர்த்தி கோபத்துடன் கேட்டாள்!
“ஆமா... ஆனா, தெரியாதுன்னு சொன்னா உன் மனசு கஷ்டப் படும்னு தான் அப்படி சொன்னேன்...” விக்கிராந்த் ‘டேமேஜ் கன்ட்ரோல்’ செய்ய முயன்றான்!
“ஏன்? இப்போ நான் வருத்தப் படலையா?”
ஆர்த்தியின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று விக்கிராந்திற்கு புரியவில்லை!
“எனக்கு உங்களை புரிஞ்சுக்கவே முடியலை விக்கி! நான் ஃபோன் செய்யும் போதெல்லாம் நீங்க பிசி! அதுக்கான காரணத்தை நான் புரிஞ்சுக்கனும்னு எதிர்பார்க்குறீங்க... ஆனால் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு நீங்க ஃபோன் செய்தா, நான் எடுத்து பேசனும்ன்னு எக்ஸ்பெக்ட் செய்றீங்க...”
அவளின் பேச்சை நிறுத்துவதுப் போல் அங்கே வந்த குமார்,
“என்ன விக்கிராந்த், அனல் பறக்கும் டையலாக் எல்லாம் காதுல விழுது... ரொம்ப டோஸா? வெல்கம் டு மேரேஜ் லைஃப்,” என்றார் ஈஸியாக!
விக்கிராந்த் அமைதியாக நிற்க, ஆர்த்தி,
“க்கும்... அப்பா,” என்றாள் சிணுங்கலாக!
“கண்ணா! நீ போய் மத்த கெஸ்ட் கூட பேசு, நான் விக்கிராந்த் கிட்ட கொஞ்சம் பேசனும்...”