மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 12 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
"ஏன் உங்களுக்கு திக்குன்னு சொல்லிச்சு??? அப்படி உங்களுக்கு என்ன பயம்?" சத்யா ப்ரியம்வதா பேச்சின் நடுவே குறுக்கிட்டு கேள்வி கேட்டாள்.
ப்ரியம்வதா ஆழ்ந்த மூச்சு ஒன்றை இழுத்து வெளியேற்றினாள்.
"உங்களை நம்பி சொல்றேன். இன்ஸ்பெக்டர் சொன்ன மாதிரியான மெஷினை நானே பார்த்திருக்கேன். வினாயக் சில வருஷங்களுக்கு முன்னாடி அப்படி ஒன்னு டிசைன் செய்தார். அதோட டெமோவை எனக்கும் காட்டினார்."
சக்தியும் சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்குப் புரியுது. ஆனால் வினாயக் அப்படி பட்டவர் கிடையாது. அவர் யாரையுமே கஷ்டப் படுத்த மாட்டார்."
"உங்க நம்பிக்கை ரொம்ப எக்ஸ்ட்ரீமா இருக்கு ப்ரியம்வதா. பார்க்க சாதுவா இருக்க மனுஷங்க என்ன எல்லாம் செய்வாங்கன்னு சொன்னா நம்ப மாட்டீங்க," என்றாள் சக்தி.
"யாரு எப்படி வேணா இருக்கட்டும். வினாயக் அப்படி இல்லைன்னு எனக்கு தெரியும்!" உறுதியுடன் சொன்னாள் ப்ரியம்வதா.
சக்தி அவள் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக இல்லை!
"எதை வச்சு இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க? முதல்ல நடந்த துப்பாக்கி இன்சிடன்ட் அப்போவும் வினாயக் காணாம போயிருந்தார்னு சொன்னீங்க. இப்போவும் அதே தான். வினாயக் இன்ஸ்பெக்டர் சொல்ற மாதிரியான மெஷின் எல்லாம் செய்ய கூடிய திறமையும் வாய்ந்தவர். தன்னோட டிசைன்களுக்காக கேஸு, கோர்ட்ன்னு அலைஞ்ச விரக்தியில கூட அவர் இப்படி ஏதாவது செய்திருக்கலாமே???"
"இல்லை, வினாயக் அப்படி செய்யக் கூடியவர் இல்லை. இந்த கத்தி எரியுற மெஷினை அவர் என்னை தவிர வேற யார் கிட்டேயும் காட்டவே இல்லை. அப்படி ஒன்னு வந்தா அதனால் பல