(Reading time: 17 - 33 minutes)

கிரிஷ்னா உடனே ராதா என்றான்.

எப்படி என்று ராதாவுக்கு விளங்கவே இல்லை.

அக்காவிடம் பேசுவதற்கு தான் செய்தேன். அக்கா இந்த நம்பர் தான் கொடுத்தாங்க என்றாள்.

ராதா திவ்யாவிடம் பேசினாள். இதே போல் தொடர்ந்தது. ராதாவும் கிரிஷ்னாவும் நண்பர்களாகி ஆகி விட்டனர். ஆனால் கிரிஷ்னாவின் காதலும் வளர்ந்து கொண்டே போனது. ராதா மீது எல்லையற்ற அன்பு கொண்டான். ராதா அவனை தனது நண்பனாக ஏற்றுக்கொண்டு அட்வைஸ் செய்ய ஆரம்பித்தாள். நல்ல படி, அம்மா அப்பாவுக்காக, நல்ல வரனும் லைப்ல என்று, அவர்கள் பேசுவதில் அதிகமாக இந்த அட்வஸ் மழை தான் இருக்கும், வேற எதுவும் கிரிஷ்னாவும் பேசியது இல்லை, ராதாவும் பேசியது இல்லை. இருந்த போதும் ராதா மனதில் ஒன்றும் தோன்றவில்லை.

தான் ராதாவை காதலிப்பதாக ராமிடம் மட்டும் கூறினான். ராம் ஒரு நொடி அதிர்ச்சியாகி

"என்னடா சொல்ற, உனக்கு தான் காதலே பிடிக்காதே, நீ எப்படி டா, இது ஒத்து வருமா, அவள் ஓ.கே சொல்லுவாளா, எல்லாத்தையும் யோசிச்சயா, நீ சொல்றனு நெனச்சேன் டா, நீ என்னடானா இப்புடி சொல்ற. டேய் சும்மா தானா சொல்ற" என்றான்.

ஒரு நொடி அமைதியாக இருந்த கிரிஷ்னா

"இல்லடா மச்சா நா ராதா பார்த்தவொடனே எதோ தோனுச்சு, அப்போ எனக்கு தெரியல என்னனு, நா அவள உண்மையா லவ் பண்றேண்டா, அவ இல்லனா என்னால வேற பொண்ணை நினைச்சுக்கூட பார்க்க முடியாது. நா ஒரளவுக்கு படிப்பேண்டா, நா அரியர் இல்லாம படிக்கிறதுக்கு காரணமே அவதாண்டா. அவ செய்த அட்வஸ் தாண்டா" என்றான்.

"கிரிஷ்னா சரி டா, நீ இவ்ளோ தூரம் போவனு எனக்கு தெரியாது. நடக்குறதை பாக்கலாம் டா". நீ அவகிட்ட சொல்லு இத முதல்ல" என்றான்.

ரு முறை சுற்றுலா சென்ற இடத்தில் தோழிகளுடன் வந்த ராதவை ராம் அழைத்து

"ராதா ஒரு நிமிசம், கிரிஷ்னா எதோ சொல்லனுமாம் உங்ககிட்ட", என்றான்.

ராதா என்ன கிரிஷ்னா என்று கேட்டாள்.

"டேய் சும்மா இருடா, இல்லங்க ஒன்னும் இல்ல, நீங்க போங்க" என்றான்.

ராதாவுக்கு லேசாக சந்தேகம் வந்தது கிரிஷ்னா மீது, தன்னை காதலிக்கிறானோ என்று, அன்றிலிருந்து கிரிஷ்னாவை கவனிக்க ஆரம்பித்தாள், அவனது பார்வை செயல்களை வைத்து கிரிஷ்னாவின் காதலை தெரிந்து கொண்டாள். இருந்தாலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை அவளால். அவன் காதலை சொல்வதில் தாமதம் ஆக்கிக்கொண்டிருந்தான்.

ரண்டாம் வருட இறுதியில் ராதாவின் அப்பா அவளுக்கு தனது தங்கச்சியின் மகனை பேசினார்கள். பேசி முடிவு செய்து விட்டு ராதாவிடம் கேட்டனர். ராதாவும் உங்க விருப்பம் போல பன்னுங்க, எனக்கு சம்மதம் என்றாள். வழக்கம் போல அப்பா அம்மாவின் விருப்பப்படி. பேசி மட்டும் முடிவு செய்து வைத்திருந்தனர். திருமணம் எப்போது என்பது பற்றி எதுவும் பேசவில்லை. அந்த மாப்பிள்ளையின் பெயர் ரோஹித். சொந்தம் என்றாலும் இரு குடும்பத்திற்கும் அவ்வளவாக பேச்சுவார்த்தை கிடையாது. திருமணம் பேசி முடித்த பிறகு தான் நெருக்கமாகினர். ரோஹித்தும் ராதாவும் பேசத் தொடங்கினர். பேச ஆரம்பித்த முதலில் சிறு சிறு சண்டைகள். எல்லாம் போக இருவரும் அவ்வப்போது பேசிக்கொண்டனர் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என்பதால்.

இந்த விஷயம் கிரிஷ்னாவிற்கு திவ்யாவின் மூலம் தெரிய வந்தது. கிரிஷ்னாவின் கவலைக்கு அளவே இல்லை. அன்று இரவு முழுதும் அழுதான். அவனால் அதனை தாங்கி கொள்ள முடியவில்லை. அதன் பிறகு அவன் தனது காதலை ராதாவிற்கு தெரியவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அவளை மறப்பது பற்றியும் அவன் யோசிக்கவே இல்லை. இந்த ஜென்மத்தில் அவள் மட்டும் தான் அவனது மனதில் என்று முடிவு எடுத்தான். காதலே பிடிக்காத அவன் ராதா மீது இவ்வளவு காதல் கொள்வான் என்பது யாரும் அறியாத ஒன்று. இருவரும் ஒரே வகுப்பில் தான் உள்ளனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் இதுவரை நேரில் பேசிகொண்டதே கிடையாது என்பது தான் உண்மை. நேருக்கு நேர் பார்த்துக் கொண்டதும் கிடையாது. இவள் பார்க்காத போது அவனும், அவன் பார்க்காத போது இவனும் பார்ப்பது மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது நாலு வருடமும். என்ன தயக்கம் என்பது தெரியவில்லை இருவருக்கும்.

நான்காம் வருடம் சுற்றுலா செல்லும் போது ராதாவை அவளுக்கே தெரியாமல் போட்டோ எடுக்க முயற்சி செய்தான், தப்பான நோக்கில் அல்ல. அவள் நியாபகமாக அவளை பார்த்துக் கொண்டே தனது வாழக்கை போகட்டும் என்பதற்காக. அவனால் முடியவில்லை. ராமின் மூலம் ராதாவின் தோழியிடம் கேமராவை கொடுத்து ராதாவை போட்டோ எடுத்து தரும் படி கூறினான். அது ராதாவிற்கு தெரிந்துவிட்டது. ராமிடம் கோபம் கொண்டாள்.

"கிரிஷ்னாவிடம் சொல்லு இதெல்லாம் சரி இல்லை என்று" என்றாள் ராமிடம்.

தான் அவளை காதலிப்பது அவளுக்கு தெரிந்துவிட்டதோ? ராதா என்ன நினைபாள் என்று தான் கிரிஷ்னாவின் கவலை. சுற்றுலாவில் ராதாவிற்கு ஒரு கிஃப்ட் வாங்கி வைந்திருந்தான் ஏதோ நம்பிக்கையில், அது ராமிற்கு கூட தெரியாது. கடைசி நாள் சுற்றுலாவில் ராதா பச்சை கலர் சுடிதார் அணிந்திருந்தாள். அந்த கலர் கிரிஷ்னாவிற்கு மிகவும் பிடிக்கும்.

சுற்றுலா முடிந்து வந்து கிரிஷ்னாவிடம் தொலைபேசியில் பேசினாள் போட்டோ பற்றி கேட்டாள். சமாளிக்க முயற்சி செய்தான் தன் காதலை மறைத்து. தன் மீது சத்தியமாக சொல் என்றாள். அவனால் பொய் கூற இயலவில்லை அதற்கு மேலும். ஆமாம் என்று ஒப்புக்கொண்டான். சாரி சொன்னான். அவள் அவன் மீது கோபப்படவில்லை. அப்படியே விட்டுச் செல்லவில்லை. நண்பன் நன்றாக இருக்க வெண்டும் நண்பன் வாழ்க்கை கெட்டு விடகூடாது என்பதற்காக அவனிடம் பேசி அவனை மாற்றி விடலாம் என்று நினைத்தாள். ஏனென்றால் கிரிஷ்னாவின் குணம் பற்றி நன்கு அறிந்திருந்தாள்.

வன் காதலிப்பதாக கூறியதிலிருந்து ராதா கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள். கிரிஷ்னாவின் மீது உள்ள அன்பு நட்பை தாண்டி அதிகமானது. அவளும் அது வரை அவளுக்கே தெரியாமல் காதலித்து வந்திருகிறாள். அது மறைந்திருந்ததற்கு காரணம், ஏற்கனவே வீட்டில் பேசி வைத்திருந்த திருமண பேச்சு தான். அவள் ரோஹித்திடம் பேசியது தான். அப்பா அம்மாவின் கௌரவம் தான். இப்படி பல எண்ணங்கள் தான். இவற்றால் நட்பு என்னும் வேலியை தானே உருவாக்கிக்கொண்டாள். கிரிஷ்னா வாழ்க்கை வீணாகி விட கூடாது. கிரிஷ்னா தன்னை மறக்க வேண்டும் என்பதற்காக ரோஹித் பற்றி கிரிஷ்னாவிடம் கூறுவாள். தான் ரோஹித்தை காதலிப்பதாக கூறினாள். கிரிஷ்னா மனதை மாற்றமுடியவில்லை அவளால்.

ஏதோ தவறு செய்வதாக உணர்ந்தாள். மனம் உறுத்திக் கொண்டிருந்த்தது. கிரிஷ்னாவிடம் பேசுவதை தவிர்த்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. ஒரு நாள் கிரிஷ்னா ராதாவிடம் என் மீது கொஞ்சம் கூட காதல் வரவில்லையா என்று கேட்டான்.

நான் உன்னை மட்டும் தான் லவ் பண்றேண்டானு என்று சொல்லி அழ வேண்டும் போல இருந்தது ராதாவிற்கு. இருந்தாலும் அதை மறைத்து நான் யாரையுமே காதலிக்கவில்லை என்றாள். மன்னிப்பு கேட்டாள்.

ஏனென்று கிரிஷ்னா கேட்டதற்கு

“சும்மா தான் தோனுச்சு கேட்டேன்” என்றாள்.

அவன் விடவே இல்லை...

“சொல்லு என்றான். என் மேல சத்தியமா சொல்லு என்றான்.

ராதா "எப்போவும் உன்ன பத்தி தா நெனச்சுட்டு இருக்கேன், உன்னை தவிர வேற எதுவும் மனசுல இல்ல" என்றாள்.

அதற்கு கிரிஷ்னா "நீ என்னை லவ் பண்றேனு நினைக்நெனைகிறேன் ராதா" என்று சொன்னான்.

அதற்கு அவளும் ஆமாம் என்றாள். இப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை ராதாவிடம் இருந்து. அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"இது போதும் எனக்கு, நீ உங்க அப்பா பார்த்த பையனயே கல்யாணம் பண்ணிக்கோ, நீ சந்தோசமா இருக்கனும் அது தான் எனக்கு சந்தோசம்". என்றான்.

ஏனென்றால் அவளுக்கு ஒரு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது. பெற்றவர்கள் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கெட்டுவிடக் கூடாது, அவளை திருமணம் செய்து தருவதாக அவள் அப்பா கொடுத்த வாக்கு கெட்டு அவர் அவமானப்படகூடாது மற்றும் ரோஹித்தின் நிலைமை என்ன என்பதற்காகத்தான், மற்றபடி ராதா மீது அவனுக்குள்ள காதல் துளி கூட குறையவில்லை. அதிகமாகிக்கொண்டிருந்தது.

 

15 comments

  • oh, iththanai varusaththai ore episode la koduthutteengale..<br />nice epi.. radha krishna seranum, athu than sariyaa irukkum..
  • very nice episode...<br />krishna - radha kandippa seranum anitha mam...<br />true love never fails... :P
  • Super update.. Orae update la ivlo info solitinga.. Gud (y) nichayamaga radhavum krishnavum than seranum... :yes: Avargalin latchiyangalaium adaiyanum..
  • Interesting plot Anitha.<br />BTW, sent you an email, please check it and feel free to get back if you have any questions / doubts :)
  • Thanks jansi :thnkx: , neenga solrathu sari, rendu perum avanga ambition la kavanam seluthanum ipo, matravai thaana nadakkum. irunthalum rendu perukkum ikattanaa soolnilai. vera vali irukaa....?
  • nice update...........radha Krishnan dan seranum.....rendu perum orutharuku oruthar romba nesikiranga........radha nambara madri avanga love-e avangala sethudum............. :yes:
  • Hi Anita, nice update inda episodela neraiya visayangala solliyirukeenga. Krishna & Radha kaadalku enna mudivunnu ketirukeenga .enakennamo avanga rendu perume avanga ambitionla kavanam selutanumnu tonudu.oru varusatla evvalavo nadakalame ......ராதாவிற்கு நம்பிக்கை இருந்தது தனது காதலில். நாம பண்ற காதல் உண்மையா இருந்த அந்த காதலே நம்மல சேர்த்து வைக்கும் என்பது தான். .... :cool: :)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.