காபியை கையில் வைத்தபடி அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தாள் வர்ஷா.
"என்னம்மா, மருமகள் வந்தப்புறம் என்ன எல்லாம் நடக்குமோன்னு இப்போவே பயமா இருக்கா?"
"வாயாடி சும்மா இரு, அப்படி எல்லாம் எதுவுமில்லை... ஆர்த்தி ரொம்ப நல்ல பொண்ணு... நல்ல குடும்பம்..."
"ம்ம்ம்... இல்லைன்னு சொல்லலை, ஆனால் நம்ம பேமிலிக்கு சரியா வருமா அம்மா?"
"வர்ஷா நீ சின்ன பொண்ணு, இதுபோல் பெரிய மனுஷி போல் எல்லாம் பேச்சு ஏன்?"
"க்கும்... அவங்க விக்கின்னு ஏன் கூப்பிடுறீங்கன்னு கேட்ட உடனே உங்க முகம் போன போக்கை தான் நானும் பார்த்தேனே..."
"ஹும்... இல்லை வர்ஷா, இந்த உலகத்தில் பொண்ணா பிறப்பதே தப்பு தான்... அம்மா இல்லாத என்னை சின்ன வயசில் இருந்து வளர்த்தது என் அத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
ிண்ணத்துடன் வந்தாள்.
"பிரியா டைம் என்ன ஆச்சுன்னு பார்த்தீயா? அரை மணி நேரம் சீக்கிரம் கிளம்பனும்னு சொல்லிட்டு இப்படி நாய் குட்டி பின்னாடியே சுத்திட்டு இருந்தா எப்படி? சீக்கிரம் கிளம்பு..." என்ற வைஜெயந்தியிடம்
"சரி அத்தை..." என்று அவசரமாக சொல்லி விட்டு சென்றாள் பிரியா.