வேறென்ன வேணும் நீ போதுமே – 02 - புவனேஸ்வரி கலைச்செல்வி
" புக் ஷொப்ல கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்போதே நெனச்சேன், உள்ள கண்டிப்பா ஒரு தேவதை இருக்கும்னு " என்றவனின் குரலை கேட்டவுடனே சுபத்ராவின் மனம் துள்ளி குதித்தது.
( வந்துட்டானா? அவன் தான் அவனேதான் .... சுபத்ரா இரு இரு ... கொஞ்சம் அப்படியே அன்னைக்கு நடந்ததை நெனசுப்பார் ..பேரு கூட சார் சொல்லலை.... இவன் பேரை தெரியாம எத்தனை நாட்களா தவிச்சுகிட்டு இருந்த நீ ? அது ஒரு பழிக்கு பழி கேம் இல்லன்னா எப்படி ? இன்னைக்கு கண்டிப்பா இவனை ஒரு வழி பண்ணிறனும் ) என்று மனதிற்குள் நினைத்தவள், அவன் புறம் திரும்பி
" சாரி என்ன சொன்னிங்க ? " என்று புருவம் உயர்த்தி கேள்வியுடன் பார்த்தாள்.
" ஹாய் சுபத்ரா, கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்போதே இங்க தேவதை இருக்கும்னு நெனச்சேன்னு சொன்னேன் "
" தேவதையா ? யாரு ? நீங்களா ? பொதுவா ஆண்களை தேவதைன்னு சொல்லி நான் கேள்விபட்டதில்லையே "
" அதானே எங்கள் ஆண் வர்கத்தை பெண்கள் என்னைக்குதான் பாராட்டி இருக்கீங்க? நான் தேவதைன்னு சொன்னது உங்களைதான் "
" ஹலோ மிஸ்டர் நீங்க யாருன்னே தெரில... முன்னபின்ன தெரியாத பொண்ணை தேவதைன்னுலாம் சொல்லிகிட்டு இருக்கீங்க.... கேட்க ஆளு இல்லன்னு நெனச்சிங்களா ?"
" ஹே சுபத்ரா ..என்னாச்சு ? அதுக்குள்ள என்னை மறந்துட்டியா?
ஜானு .............
சீரகம் ...............
சோம்பு...............
சூப்பர் மார்க்கெட் .......
வைட் ரோஸ் ......... "
" சார் நீங்க என்ன சேல்ஸ் மேனா ? சீரகம் சோம்பு நு லிஸ்ட் போட்டுகிட்டு இருக்கீங்க ? விட்டா அரிசி , புளி , பருப்புன்னு சொல்லுவிங்க போல "
" நீங்க சுபத்ரா தானே "
" ஆமா.......... "
" அப்போ எப்படி என்னை தெரியாம இருக்கும் ? "
(அடடா என்னமா உரிமை பாராட்டுறான்? இருந்தாலும் பார்க்க கொஞ்சம் பாவமாக தான் இருக்கு )
" என் பேரு சுபத்ரா தான் ... ஆனா நீங்க யாரு ? உங்க பேரு கூட எனக்கு தெரியாதே ? "
( பேரா? ஓஹோ இதான் விஷயமா.... எனக்கே போக்கு காட்டுறியா ) என்று மனதுக்குள் சிரித்தவன்,
" ஹே சுப்பு ..... நான்தாண்டி உன் அத்தை பையன் "
" என்னாது சுப்பு வா? "
" ஆமா சுப்பு ...அத்தை சொன்னங்க ...நீ ஒரு விபத்துல பழசை எல்லாம் மறந்துட்டேன்னு ...ஆமா உன்னை எப்படி வெளிய விட்டாங்க ..சரி சரி வா என்கூட" என்றபடி அவளின் கைபற்றினான் அவன்.
" சார் நான் சுப்பு இல்ல சுபத்ரா "
" இல்ல இல்ல நீ என் சுப்பு என் சுப்பம்மா தான் ....என்ன ரொம்ப பேசுற நீ? என் பேரு சொல்லு? சொல்லு சொல்லு ? என் பேரை சொல்லு ? "
" தெரியாதே "
" பாரு என் பேரே மறந்து போச்சு இதுல உன் பேரா ஞாபகம் இருக்கப்போகுது? வா வா ..... இன்னும் ஒன் வீக்ல நமக்கு கல்யாணம் "
" கல்யாணமா? சார் உங்க வைப் ஜானுவுக்கு இது தெரிஞ்சது நீங்க காலி " என்றவள்
( அச்சோ உளறிட்டேனே ) என மானசீகமாய் தலையில் தட்டிகொண்டாள்...
" ஹா ஹா என்கிட்டயேவா? உனக்கு ஏன் சுபத்ரா இந்த வீண் விளையாட்டுலாம் ...நாங்கலாம் 5 வயசுலேயே அவ்வையார் கெட் அப் போட்டவங்க " என்றவன் உல்லாசமாய் சிரிக்க, வெட்கத்தில் முகம் சிவந்தாள் சுபத்ரா.... அவன் தன்னை ஒருமையில் விளித்ததை அவள் கவனித்தாள்தான் ..எனினும் அதை தடுக்கவில்லை......
(இந்நேரத்துக்கு ஒரு சாங் வரனுமேனு நீங்க கேக்குறது புரியுது ... சுபத்ரா இருக்க பயமேன் ..இந்நேரத்துக்கு அவ மைண்ட் லே சாங் வந்துருக்குமே )
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதைத்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்ய கூடும் ?
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது நீ
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
" என்ன சுபத்ரா ? ஒன்னு என்னை பார்த்தா கீழே விழுந்து வைக்கிறே இல்லன்னா சைலண்ட் ஆகிடுறியே " என அவன் நகைக்க
" ஹலோ சார், நான் விழுந்து வெச்சேன்னா ? இல்ல நீங்க தள்ளி விட்டிங்களா ? என ரோஷமாய் பதில் சொல்ல
" தள்ளி விட்டேனா? விட்டா கொலை முயற்சி கேஸ் போட்டுருவியே ...போதும் தாயே போதும் ..கொஞ்சம் மலை இறங்கி வா ...சமாதானம் ??? " என்றவன் கை நீட்ட
" ம்ம்ம்ஹ்ம்ம் உங்க பேரு சொல்லுங்க அப்போ தான் ஹெண்ட் ஷேக் பண்ணுவேன் " என்றாள்.
" என் பேரை நான் ஏன் சொல்லணும் ? நீயே சொல்லு " என்றான் ..
" நானே எப்படி சொல்லுவேன் "
" ஹா ஹா இப்போ பயங்கரமா இடி இடிச்சா நீ என்ன பண்ணுவே ? "
" அர்ஜுனா நு சொல்லி காதை பொத்திக்குவேன்...........ஹேய் உங்க பேரு அர்ஜுனாவா ? "
" ஆமாம் இளவரசி நான் தங்களது அர்ஜுனனே தான் " என்றபடி தலைசரித்து ஆமோதித்தான் அர்ஜுனன்.
( இததான் நான் போன எபிசொட் கம்மேன்ட்ல சொல்லிடேனேனு சில பேரு சொல்றது எனக்கு கேக்குது... நீங்கலாம் அவ்ளோ ஷார்ப் பாஸ் .......! )
" என் அர்ஜுனனா? இது ஜானகி கிட்ட சொல்லட்டுமா ? "
" ஹ்ம்ம் கண்டிப்பா சொல்லு சுபி.... அதுக்கு முன்னாடி இந்த புக்ஸ் வாங்கிட்டு நீ எங்க போக போறேன்னு சொல்லு ? "
" ஒன்னும் பிளான் இல்ல அர்ஜுன் . இன்னைக்கு சண்டே தானே சோ ஏதும் வேலை இல்ல "
" சரி அப்போ வீட்டுக்கு வா ...ஜானு உன்னை பார்த்தா சந்தோஷப்படுவா "
" ஓ அப்போ ஜானு சந்தோஷத்துக்காகத்தான் கூப்பிடுரிங்களா ? " என்றவளின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை அசைக்க,
" கார்ல சொல்றேன் " என்றான்......