(Reading time: 13 - 25 minutes)

" ஹா ஹா ..  ஒரு படத்துல சமீரா ரெட்டிக்கு விஷால் மேல லவ் வரும் "

" வெடி படம் தானே ?"

" ம்ம்ம் ஆமா ..அதுல விவேக் சொல்வாரு , அவனை கூட்டிட்டு ஏதாச்சும் லாங் டிரைவ் போ .. அவன் உன்னை லவ் பண்ணினா கண்டிப்பா நாம எங்க போறோம்னு கேள்வி கேட்க மாட்டான்னு .. பட் நீ என்னனா 100 தடவைக்கு மேல கேட்டுட்ட .. போடி " என்று சிலுப்பி கொண்டான் அருள் ..

" ஹே சண்டை கோழி .. நான் அப்படித்தான் கேள்வி கேட்டு உன்னை வெறுப்பேத்தி ரசிப்பேன் .. அதுக்காக உன் மேல லவ் இல்லைன்னு அர்த்தம் ஆகிடுமா ? ஐ லவ் யூ டா மாம்ஸ் " என கண்ணடித்தாள் வானதி .. அவளையே ரசனையாய்  பார்த்தான் அருள்மொழிவர்மன் ..

" என்ன பார்வை உந்தன் பார்வை ?

இடை மெலிந்தாள்  இந்த பாவை "

" ஹே நான் ரொம்ப நல்ல பையன் டீ ..இந்த மாதிரி கில்மா பாட்டெலாம் பாட கூடாது " என்றான் அருள் பயந்தவனை போல ... வானதி கண்களை சுருக்கி பெருமூச்சு விட்டாள் ..ஓஹோ கோபமாய் இருக்கிறாளாம் .. அதை ரசித்தவன்

" என்ன விலையழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்

ஒரு மொழி இல்லாமல்

ஒரு மொழி இல்லாமல் மௌளனமாகிறேன் "

" அஹெம் அஹெம் ... பேச தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லு மேரா  ஜான் .. அதை விட்டுட்டு மௌனம் ஆகிறேன்னு பாட்டு பாடி சமாளிக்காத மாம்ஸ் " என்றாள்  வானதி ..

" சத்தியமா உனக்கு என்னவோ ஆச்சு டீ " என்று ரசித்து சிரித்தான் அருள் .. மனதிற்குள் இந்த சிரிப்பு மறையாமல் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான் அருள் .. அவனும் சாஹித்யாவும் திரும்பி இந்தியாவிற்கு வந்தப்போது  நடந்ததை எல்லாம் நினைவு கூர்ந்தான் அவன் .. எல்லாரும் அப்படியே மேல பாருங்க .. நாமளும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிப்போம் ...

You might also like - Rose and Thorn... Free English romantic story 

" ன்ன சொல்லுற நதி ? " அருள் விழிகளை விரித்து வாயை பிளந்து கொண்டு பார்க்க சத்யா கையில் இருந்த பாப் கார்னை  அவனது வாயில் போட்டுவிட்டு " கோல்  " என்றாள் ..

" அடியே "

" ஹா ஹா கூல்  நண்பா ..அதான் என் செல்லகுட்டி வானதி தெளிவாய் சொல்றாளே கிரி அத்தானுக்கும் கவி அக்காவுக்கும் கல்யாணம் ஆச்சுன்னு .. இன்னும் எவ்வளவு நேரம் ஷாக்ல இருப்ப நீ ? "  என்றாள்  சத்யா கிண்டலாய் ..

" ஹே லூசு இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா ? என் நதி ஒரே ஆளாய் எல்லாரையும் சரி கட்டிட்டா " என்றான் அருள் பெருமையாய் .. இருவரையும் பார்த்து அழகாய் புன்னகைத்தாள்  வானதி ..

" எனக்கு இது ஒன்னும் பெருசா தெரியலை " என்றாள்  சத்யா அலட்சியமாய் ..இருவரும் அவளை கேள்வியாய்  பார்க்க

" பின்ன, நடமாடும் கழுதை உன்னையே அவ லவ் பண்ண வெச்சுட்டா ..இதைவிடவா பெரிய சாதனை இருக்கு " என்று சிரிக்க

" கழுதையா நான் ? இருடி உதைக்கிறேன் " என்று அருள் முறைக்க

" அப்போ நீ கழுதை தான்னு ப்ரூவ் பண்ணுறியா அருள் " என்று வானதியும் சேர்ந்து கொண்டு அவனை சீண்டினாள் ... இப்படியாய் மூவரும் பெசிகொண்டிருக்கும்போதுதான் இன்னொரு விஷயமும் அருளுக்கும் சத்யாவிற்கும் தெரிய வந்தது .. தேனீயில்  இருந்து திரும்பி வந்த கவிமதுரா , எப்போதும் போலவே  வானதியுடனும்  கிரிதரன் தனது பெற்றோருடனும் இருப்பது அப்போதுதான் தெரியவந்தது .. ஏனோ அதை சொல்லும்போது வானதி கொஞ்சம் தடுமாறியது போல தெரிய , சாஹித்யாவும் அருளிடம் அதைப்பற்றி பேசாதே என்று சமிக்ஞை காட்டினாள் ... இருவரும் வீடு திரும்பும்போது

" என்னமோ இடிக்கிதே சத்யா "

" டேய் , நான் குண்டாகிட்டேன்னு சொல்ல வர்றியா ?"

" ச்சை .. இந்த இடத்துல இப்போ இப்படி ஒரு காமிடி தேவையா  லூசு ?"

" ஹா ஹா ... சரி இரு நான் ஒரு முக்கியாமான ஆளுக்கு போன் போட்டு உன் சந்தேகத்தை தீர்க்கிறேன் "

" அஹெம் அஹெம் ..உன் சந்தோஷ் கூட நீ ரொமான்ஸ்  பண்ணுறதுக்கு என் சந்தேகம் ஒரு சக்கா ?" என்றான் அருள் நக்கலாய் ..

" லூசு லூசு ..உன் புத்தி எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிறது " என்றவள் கிரிதரனுக்கு போன் போட்டாள் ...

" ஹலோ "

" ஹெலோ கிரி அத்தான் .,.. நான் சாஹித்யா "

" ஹே வாலுபொண்ணு ..எப்படி இருக்க "

" எனகென்ன சூப்பரா இருக்கேன் ..பட் நீங்கதான் புது மாப்பிளை ஆகின விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்லையே ?"

"அடடே பெரிய மனுஷி ..நீங்கதான் என் தம்பியோடு டுயட் பாட போயிட்டிங்களே .. கல்யாணம் முடிஞ்சதுமே சின்னம்மா சித்தப்பாவை பார்த்துட்டு உங்க வீட்டுக்கு தான் வந்தேன் .. அர்ஜுன் அங்கிள் சொல்லலையா ?"

" அவர் சொன்னாலும் , நீங்கதானே சொன்னிங்க நான் பெரிய மனுசின்னு அப்போ எனக்கென மரியாதை தந்திங்க " என்று சண்டைக்கு வந்தாள்  சத்யா .. அவள் தலையில் செல்லமாய் குட்டு வைத்தான் அருள் ..

" மன்னிச்சிட்டு தாயே .. வேணும்னா ஏதும் பனிஷ்மெண்ட் கொடுத்திடு "

" கண்டிப்பா பனிஷ்மெண்ட் உண்டு ..நீங்க எனக்கு ஒரு உண்மை சொல்லணும் .. அதுதான் பனிஷ்மெண்ட் "

" சோழியும் குடுமியும் சும்மா ஆடாதே .. நினைச்சேன் .. சொல்லு என்ன விஷயம் ?"

" அதை தான் நானும் கேக்குறேன் .. கவி அக்காவும் வானதியும் இன்னமும் தனியாதான் இருக்காங்கனு தெரிய வந்தது ..அதபத்தி பேசுறதுக்கு வானதிக்கு  ஏதோ சங்கடமாய் இருந்த மாதிரி நான் பீல் பண்ணேன் .. அதான் ..என்ன ஆச்சு ?  "

" நானே நீங்க வரணும்னு தான் வெயிட் பண்ணேன் .. அருள் கூட இருக்காரா ?"

" இதோ பக்கத்துல தான் இருக்கான் .. "

" அப்போ போனை ஸ்பிகர்ல போடு "

" ம்ம்ம்ம் "

" ஹாய்  சார் "

" ஹாய்  அருள் ... ஜர்னி எல்லாம் எப்படி இருந்துசு ?"

" அதெல்லாம் பைன் ... உங்க கல்யாணத்துக்கு என் வாழ்த்துக்கள் "

" தேங்க்ஸ் அருள் " என்று கொஞ்சம் இடைவெளி விட்டான் கிரி .. பிறகு பேச தொடங்கினான் ..

" நானும் மதுராவும் வானதியுடைய அம்மா அப்பாவை பார்க்க போனோம் அருள் "

"அத்தையும் மாமாவும் எப்படி இருக்காங்க கிரி " அருள் சிந்தனை படிந்த முகத்தோடு தீவிரமாய் கேட்டான் ..

"எங்களை ஆசிர்வாதம் பண்ணினாங்க அருள் "

"..."

" உனக்கு நான் என்ன சொல்லுறேன்னு புரிஞ்சுக்க முடியுதா அருள் ?"

" ம்ம்ம்ம் எதிர்பார்க்காத வரவேற்புன்னு சொல்ல வர்ரிங்க தானே ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.