உறவுகள் இல்லையென்றால் அது வேறு. ஆனால் இருந்தும் இல்லாதது போல் ஒதுங்கியிருப்பது கொடுமை. மகனிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம். அது அவன் மனதுக்குள் சென்றதா? இல்லையா? தெரியாது. இனி அவன் வாழ்க்கை. அவன் பாடு.
ஆனால் ஜெயந்தனின் மனமோ நடந்ததை கேட்டறிந்ததும் கோபத்தில் கொந்தளித்தது.
‘இந்த அப்பா மட்டும் தேவையில்லாம அம்மாவை வருத்தாம இருந்திருந்தா மாமா வீட்டோட சொந்தம் தொடர்ந்திருக்கும். இன்னிக்கு நான் யாருக்கோ மாப்பிள்ளையா ஆக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்காது. இந்த அம்மாவும்தான் ஆகட்டும். இப்போதுதான் தம்பி குடும்பத்தோட சொந்தம் கொண்டாடனும்னு தோணுச்சா? கொஞ்ச நாட்கள் முன்னாடி இந்த கல்யாணம் முடிவாகறதுக்கு முன்னாடி நான் சுஜயாவை பார்த்திருந்தால்? அம்மா மேல மாமா
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கு?”
உனக்கு கல்யாணமாகப்போகுது. தேவையில்லாத வேலையில் ஈடுபடாதே என்ற மிரட்டல் அதில் தொனித்தது.
இருவரும் அவரவர் சொத்தை அடுத்தவர் பிடுங்க நினைப்பது போல் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டனர்.
வசீகரனின் வண்டியில் ஏறி அமர்ந்தாள் சுஜயா.
“சுஜி. என் தோளைப் பிடிச்சுக்கோ.”