அவன் சொன்னதும் அவள் பிடித்துக்கொள்ள வெற்றிக்குறியுடன் ஜெயந்தனை பார்த்தான்.
‘என்னதான் நீ உறவுக்காரனாய் இருந்தாலும் சுஜயாவின் மீது எனக்கிருக்கும் உரிமை உனக்கு கிடையாது’ என்று சொல்லாமல் சொல்லியது அவன் பார்வை.
கோபத்தில் காலை தரையில் உதைத்துக்கொண்டான் ஜெயந்தன்.
வண்டியில் செல்லும்போது வசீகரன் இனி ஜெயந்தனோடு பேச வேண்டாம் என்று சொன்னான்.
“இனி அவனைப் பார்த்தா போய் பேசாதே சுஜி. அவன் பார்வையே சரியில்லை.”
“அப்படி எல்லாம் இல்லை மாமா. முதல்ல அவர் என்னைக் கவனிக்கவே இல்லை. நான் இங்கே படிக்கிறேன்னே அவருக்கு தெரியலை.” சமாதானமாய் சொன்னாள்.
ஆனால் அது நடிப்பு என்று வசீகரனுக்கு புரிந்தது.
‘பாம்பின் கால் பாம்பறியும்’னு சொல்வாங்க.
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Episode # 17
{kunena_discuss:957}