19. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய சுஜயா விஸ்வநாதனின் வீடு திறந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். பாக்கியம் எப்போதுமே கதவைத் திறந்து போடமாட்டாள். வீட்டுக்கு யார் வந்தாலும், யார் என்று பார்த்துவிட்டுதான் கதவையே திறப்பாள். ஆனால் சரஸ்வதி அப்படி இல்லை. அவள் கிராமத்தில் இருந்ததால் கதவைச் சாத்துவதை மறந்து போவாள். பாக்கியம்தான் அவளிடம் அறிவுறுத்துவாள். இப்போது பாக்கியமே கதவைத் திறந்து போட்டிருந்தால் அது ஆச்சர்யமாகத்தானே இருக்கும். ஆனால் சிறிது நேரத்திலேயே அவள் மனதில் கலவரம் வந்தது.
வீட்டுக்குள் விரைந்தோடினாள். அவள் பயந்தமாதிரியே அங்கே பாக்கியம் சுயநினைவின்றி கிடந்தாள். சுஜயாவுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ே விரைந்தனர்.
“உனக்கு என்னாச்சும்மா? ஏதோ அதிர்ச்சின்னு டாக்டர் சொல்றாரே?” கண்கள் கலங்கியவாறு மனைவியின் கைகளைப் பற்றிக்கொண்டார்.
“மாமா…” கண்டிப்பான குரலில் விஸ்வநாதனை அழைத்து பாக்கியத்தின் நிலையை அறிவுறுத்தினாள்.
அவரும் தன் கண்களை துடைத்துக்கொண்டு நிதானத்துக்கு வந்தார்.