பரிட்சை எழுதிவிட்டு வந்த சுஜயா பாக்கியம் பேசுவதைக் கேட்டு ஆனந்தமடைந்தாள்.
“அத்தை!” ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.
“என்னடா? பரிட்சை எப்படி எழுதினே?”
“நல்லா எழுதினேன்.”
“நீ நல்லா படிக்கனும். வேலைக்கு போகனும். உன் குடும்பத்தை பார்த்துக்கனும் சரியா?”
“சரித்தை. நீங்க எல்லாத்தையும் பார்க்கத்தானே போறீங்க.”
“ஆமான்டா. எல்லாத்தையும் பார்க்கத்தானே போறேன். சரி நீ போய் படி.”
“இன்னும் கொஞ்ச நேரம் உங்ககிட்ட பேசிட்டு படிக்கிறேனே.”
“சரிடா. கண்டிப்பா அப்புறம் போய் படிக்கனும்.”
“சரித்தே.”
அதன் பிறகு பாக்கியத்துடன் பேசிவிட்டு சொன்னமாதிரியே அந்த அறையிலேயே அமர்ந்து படித்தாள். இரவு நேரம் நெருங்குகையில் அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னும் சுஜாவுக்கு பதினெட்டு வயசே ஆகலையே?”
‘அப்ப நீங்க அவசரப்பட்டதால்தான் நான் இப்ப அவஸ்தைப்படறேன்.’ மனதுக்குள் நொந்துகொண்டாள்.
“இல்லை. சூர்யா அப்ப பார்க்க சின்னப் பொண்ணு மாதிரியே இருந்தா. ஆனால் இப்ப சுஜாவைப் பார்க்கிற யாரும் அவளுக்கு பதினெட்டு வயசுகூட ஆகலைன்னு சொல்லமாட்டாங்க.”