‘வரட்டும் இன்னைக்கு இவ…….அவள நேர்ல வயல்லயே வச்சு பிடிச்சுட வேண்டியதுதான்….30 மினிட்ஸ் கழிச்சு தான ஆள வர சொல்லிருக்கா…..இவ வந்த நோக்கம் நல்லதா கெட்டதான்னு புரிஞ்சுக்க 5 நிமிஷம் போதாதா….? நல்லதா இருந்தா நல்லபடியா திருப்பி அனுப்பி வைக்கனும்…இல்லனா நைட்டோட நைட்டா திருட்டு கேஸ்ல போலீஸ்ட்ட போட்டுவிட வேண்டியதான்….. ‘
இப்படியாய் முடிவு செய்தவன் அனு சொல்ற மாதிரி இப்டி ரெண்டு பேரையும் சேர்ந்து பார்த்தா ஊருல இழுத்து பிடிச்சு கல்யாணம்லாம் செய்து வைக்க மாட்டாங்கன்னாலும்….. அவள் எதாவது கதை பரப்பிவிட்டால் ப்ரச்சனை ஆக கூடாது என எதற்கும் இருக்கட்டும் என தன் ஃப்ரெண்ட் லோக்கல் டிஎஸ்பி சசிபாலை கூடவருமாறு அழைத்தான். வரும் வழியில் கொண்டல்புரம் பக்கத்தில் தான் சசி பேட்ரோலில் ஈடுபட்டிருப்பதை பார்த்துவிட்டு வந்திருந்தான் இவன்.
ஆனாலும் சசிபால் வந்து சேர்ந்து பின் இருவருமாய் அனு சொன்ன அந்த வயலை அடைய வழக்கமாக அதிபன் அங்கு செல்லும் நேரத்தைவிட தாமதமாகிவிட்டது.
வந்துட்டு யாரும் இல்லைனு பார்த்துட்டு திரும்பி போயிருப்பாளோ…..?
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
சசிபால் இவனைத் தொடர வயல் வரப்பின் வழியாய் இவன் வழக்கமாக அமரும் கிணற்றடியை அவசரமாக நெருங்கினான்…… தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தெரிகிறது அங்கு வழக்கமாக எரியும் ட்யூப் லைட் எரியவில்லை…..
கடும் இருட்டு….
ஆனாலும் இவனுக்கு நன்கு பழகிய இடம் அல்லவா…..அதனால் தயங்காமல் முன் சென்றவன்…. அருகில் இருந்த சசியை…. “மாப்ள நான் அங்க போய் லைட் ஆன் பண்ற வரை வெயிட் பண்ணு…..கிணறு கைப்பிடி சுவர் இல்லாம இருக்கு…. ரொம்ப ஆழம் வேற….தண்ணியும் ரொம்ப கீழ கிடக்குது…..குறுக்க படிகட்டு வேற இருக்கு….” என்று எச்சரித்து நிறுத்திவிட்டுப் போனான்.
செவ்வக வடிவ அந்த ராட்சச கிணற்றின் கிழக்கு பக்கம் மோட்டர் ரூம்…..அதன் முடிவில் வடக்கு பக்கம் பம்ப் செட் தண்ணீர் தொட்டி… கொஞ்சம் ஓவர் சைஃஸ் தொட்டி…..மற்றபடி வடக்கு புறம் முழுவதும் சிமெண்ட் தரை….துணி துவைக்க கல்…. முந்தைய காலத்தில் மாடு வைத்து நீர் பாய்ச்சிய அடையாளமாக ஏற்றம் இறைத்த குழிப் பாதை…. இதுதான் அந்த கிணற்றின் அமைப்பு...
அதி கிணறை சென்றடைந்தது கிணற்றின் மேற்கு புறமாக….. கை பிடி சுவர் இல்லாததால் பழக்கம் இல்லாதவர்கள் சற்று தடுமாறினாலும் கிணற்றின் அடியில் இருகும் படிக்கட்டில் போய் விழ நேரிடும்….உயிரோட அந்த மனுஷனை திரும்ப பார்க்கிற வாய்ப்பு கம்மி…
அதனால் தான் சசிபாலை நிறுத்திவிட்டு வந்திருந்தான் இவன். அந்த இடத்தை கடந்து கொண்டிருக்கும்போதே அதற்குள் இருட்டுக்கு பழகிவிட்ட கண்ணுக்கு தெரிகிறாள் கிணற்றின் வடக்கு புறமாக நடந்து கொண்டிருக்கும் அனு….
‘கோழிய பார்த்து பயந்த மாதிரி சீன் போட்டவ…..இங்க கும்மி இருட்ல என்ன செய்துகிட்டு இருக்காளாம்???’
இப்போது இன்னும் இரண்டு எட்டு இவன் அமைதியாக எடுத்து வைக்க….. இவன் எதிர்பாரா வண்ணம் சட்டென இவன் மீது விழுந்து இவனை இறுகி அணைத்தாள் அவள்.
சே…..அருவருத்துப் போனான் அவன்.
“தீபன்…” என ஒரு வித குரலில் அவள் அழைக்க தொடங்கிய நேரம்…… அவளை தன் மீதிருந்து பிய்த்து எறிந்திருந்தான் அவன்.
“சீ……இன்னொரு தடவ இங்க பார்த்தேன் கொன்னுட்டேன் உன்ன….” என உறுமியபடி அவளை பிடித்த வேகத்திலேயே முரட்டுத்தனமாய் வீசி எறிந்தான்.
அப்போதும் அவ கிணத்துலயோ தொட்டியிலயோ விழுந்துடக் கூடாது என அவைகளுக்கு அடுத்த பக்கமாகத்தான் அவளை எறிந்தான்….
ஆனால் எதிர்பாரா இந்த நிகழ்வில், இவன் வீசியதும் நிற்க முடியாமல் எதிலோ போய் நங் என இடித்து, அதன் எதிர் செயலாக அங்கிருந்து தள்ளப்பட்டு, துணி துவைக்க சற்று உயரமாக வைத்திருந்த கல்லில் போய் குப்புற விழுந்தாள்….. ந்நநச்ச்ச்ச்…
அப்படி அங்கு நங் என இடித்து தள்ள எதுவும் இவனறிந்த வரை கிடையாது எனினும்…..அது என்ன என்றெல்லாம் இவனால் யோசிக்க முடியவில்லை….
காரணம் கல்லில் அவள் விழுந்த கோலம் அரை குறையாகதான் புரிந்தாலும்….அவளுக்கு அடி பலமாய் பட்டிருக்கும் என இவனுக்கு தெளிவாக புரிகிறது…..கல்லில் இடித்த இடம் அவள் வயிறாயிற்றே….
விழுந்தவள் விழுந்தவுடன் எழவும் இல்லை……என்னதான் அவள் மேல் கோபம் எரிச்சல் அருவருப்பு என்றாலும்….அவள் அடிபட்டு கிடப்பதை பார்த்துக் கொண்டு நிக்க இவனுக்கு எப்படி முடியும்…?
“ஏய்….” என்றபடி இவன் போய் அவளை தூக்க முயல….அவளோ அதற்குள் இவன் பிடிக்கு உட்படாமல் உருவிக் கொண்டு போனாள்…..அதுவும் தன் வயிறை தன் கையால் குறுக்காக இறுக்கி அழுத்தியபடி…. நிமிர முடியாமல் தள்ளாடியபடி…
“ஷ்ஷ்ஷ்ஷ்….ஸ்ஸ்ஸ்ஸ்…..ஹாஆ…ஹாஆ….”
வலியில் கத்திவிடாமல் இருக்க தன் வலக்கை ஆட்காட்டி விரலை வாயின் குறுக்காக வைத்து கடித்துக் கொண்டவளை மீறி இந்த சத்தங்கள் வெளி வர….
இருந்த அரை குறை பார்வை புரிதலிலும் அவள் தள்ளாடுவது புரிய……பம்ப்செட் நீர் தொட்டியின் புறம் அவள் செல்வது உறைக்க….. அவள் திமிறலை மீறி வலுகட்டாயமாகவே அதி அவளைப் பிடித்தான் இப்போது….