(Reading time: 11 - 21 minutes)

17. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தி தன் வேதனையை மறைத்துக் கொண்டு சாதாரணமாக பேசி கொண்டிருந்தான். இந்த நிலையில் ஆதி பிரயுவின் முதல் திருமண நாள் வந்தது.

ஏற்கனவே செய்தது போல் பிரயுவிற்கு தன் பரிசை அனுப்பி வைத்தான். ப்ரயு வருத்தத்தில் இருந்தாலும் அதை பெரிதாக்க விரும்பாமல், அவன் அனுப்பிய பரிசை ஏற்றுக் கொண்டு அவனிடம் நன்றாக இருப்பதாக கூறினாள்.

இருவருக்குமே காதலர் தினத்தன்று இருந்த உற்சாகம் இல்லை. ஆதி அந்த உற்சாகம் பிரயுவிடம் தோன்றுமோ என்றும், பிரயுவோ அந்த நாள் நினைவில் தனக்கு அப்படி ஒரு சந்தோஷம் இனி கிடைக்குமா என்ற கேள்வியோடும் அந்த நாளை கழித்தனர்.

பிரயுவின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து போன் செய்தனர். பிரயுவின் மாமியாரும் பட்டும் படாமல் வாழ்த்து தெரிவித்தார். வித்யாவும் பிரயுவை வாழ்த்தினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

வித்யா குழந்தை பிறந்து நாற்பது நாட்கள் முடிந்திருந்தது. வித்யாவின் கணவர் இப்போதெல்லாம் மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்திருந்தார். முன்பும் வருவார் என்றாலும், தங்க மாட்டார்.

இப்போ குழந்தை கொஞ்சம் விளையாட ஆரம்பிக்கவும், இரவினில் தங்க ஆரம்பித்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு வருபவர் , திங்கள் கிழமை ஆபீஸ்க்கு நேராக இங்கிருந்து சென்று விடுவார். மீண்டும் புதன் கிழமை தங்கி விட்டு செல்வார்.

ஆதியின் வீடு டபுள் பெட்ரூம் flat தான். ஒன்றில் பிரயுவும், மற்றொன்றில் அவள் மாமியாரும் இருப்பார். இப்போ வித்யா இங்கே வந்த பிறகு , வித்யாவிற்கு அவள் மாமியார் அறையை கொடுத்திருந்தனர், அவள் மாமியார் உடல் நிலை காரணமாக இவர்கள் அறையில் படுத்திருப்பார்.

வித்யா கணவர் வர ஆரம்பித்தபின் அவளுக்கு இரவுகளில் முழிக்கும் வேலை இல்லை. ஆனால் அதற்கு பதில் வீட்டு மாப்பிள்ளை என்பதால் அவருக்கு உணவு வகைகள் சிறப்பாக செய்ய வேண்டியிருந்தது. அது கூட அவளுக்கு பிரச்சினை இல்லை.

அவள் நடமாட்டம் சுருக்கி கொள்ள வேண்டியிருந்தது. திருமணம் ஆகி வந்ததிலிருந்தே ஆதியும் வெளிநாடு சென்ற பின் வீட்டில் பெண்கள் தான் என்பதால் , நைட்டியில் இருப்பது பழக்கமே.. அதே போல் காலையில் இவள் வேலை எல்லாம் முடித்து விட்டு தான் குளிக்க போவாள்

ஆனால் வித்யா கணவர் இங்கிருப்பதால் பிரயுவிற்கு இதில் சில சங்கடங்கள் ஏற்பட்டது. ஆதி இருந்திருந்தால் வேறு மாதிரி..

அதே சமயம் என்னதான் எதையும் கண்டுக்காமல் இருந்தாலும், வித்யாவின் கணவர், குழந்தையை கொஞ்சும் சாக்கில் வித்யாவை சீண்டுவது, இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது இதையெல்லாம் பார்த்தால் அவளின் மனம் ஏங்கும்.

அதனால் அவள் தங்கள் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை.

வர்கள் திருமண நாள் முடிந்து ஒருவாரத்தில் ப்ரியாவின் திருமணம் வந்தது. சனிக்கிழமை reception, சண்டே திருமணம் .... வித்யாவின் கணவர் இருப்பார் என்பதால் பிரயுவை முதல் நாளே அனுப்பி வைத்தார் அவள் மாமியார்.

பிரயுவின் பெற்றோர் முதல் நாள் வரவேற்பில் கலந்து கொண்டார்கள். பிரயுவின் தங்கைகள் இருவரும் அவர்கள் சொந்தத்தில் கல்யாணம் என்று சென்று விட்டார்கள்.

ப்ரயு ப்ரியாவின் கல்யாணத்தில் ரொம்ப நாள் கழித்து உற்சாகமாக இருந்தாள். அவள் வேலை பார்த்த hospitalil இருந்து வருபவர்களை கவனித்து அனுப்பும் பொறுப்பை அவள் ஏற்றிருந்ததால், எல்லோரையும் வரவேற்று, சாப்பிட வைத்து அனுப்பிக் கொண்டிருந்தாள்.

ப்ரியாவின் கணவர் பிரபாகரனின் friends எல்லோரும் ஒரே கலாட்டாவாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரே ஆட்டமும் , பாட்டமும் தான். இரவு இவள் அங்கேயே தங்கி விட்டதால், அவர்களின் கலாட்டாவில் அவளும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் ப்ரியாவை டான்ஸ் ஆட சொல்ல, அவள் தனியாக ஆடாமால் பிரயுவையும் இழுத்துக் கொண்டு ஆட ஆரம்பித்தாள். முதலில் தயங்கிய ப்ரயு, பின் அவளும் நன்றாக என்ஜாய் செய்ய ஆரம்பித்தாள். ப்ரயு பரதநாட்டியம் கற்றவள் என்பதால் அவளின் நடனத்தில் இருந்த நளினமும், பாவமும் சேர்ந்து எல்லோரயும் கட்டி போட்டது.

பிறகு எல்லோரும் அவளை சோலோ டான்ஸ் ஆட சொல்ல,

        “கண்ணா வருவாயா... மீரா கேட்கிறாள்... “

பாட்டிற்கு ஆடினாள்.

ரொம்ப நாள் கழித்து ஆடியதால் உடலில் கொஞ்சம் அசதி இருந்தாலும், மனம் மிகவும் உற்சாகமாக இருந்தது.

மறுநாள் கல்யாணத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டாள். திருமணம் வரை ப்ரியாவோடு இருந்தவள், அதன் பின் அவளை அவள் கணவனோடு விட்டு விட்டு, மற்ற வேளைகளில் ஈடுபட்டாள்.

அன்று மாலை தங்கள் வீட்டிற்கு வந்தவள் முகத்தில் ரொம்ப நாள் கழித்து மகிழ்ச்சி தெரிந்தது.

அன்று அவள் வரும் நேரம் தெரியாததால் , சீக்கிரமே அவள் மாமியார் வேலைகளை முடித்திருந்ததார. அதனால் அவளும் சற்று இலகுவாக இருந்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.