அன்று ஞாயிறு விடுமுறை என்பதால், அவளே ஆதியை சாட்டில் அழைத்தாள்.
ஆதிக்கு அவள் கூப்பிட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நடுவில் ஏற்பட்ட சில மன கசப்புகளுக்கு பிறகு, ப்ரயு ஆதியை கூபிடுவதே இல்லை.. இன்று அவளே கூப்பிடவும் , உடனே வெப் காம் முன்னால் வந்தவன், பிரயுவின் மலர்ந்த முகத்தை பார்த்து ரசித்தான்.
“ஹலோ... என்ன ..ஸ்க்ரீனே பார்த்துட்டு இருக்கீங்க... ?” என்று கேட்கவும்,
“ஹ்ம்ம்.. என் ரதி குட்டி ரொம்ப ஹாப்பி ஆ இருக்கிற மாதிரி இருக்கேன்னு ரசிச்சுட்டு இருக்கேன்.. உங்க ..முக மலர்ச்சிக்கு காரணம் என்னவோ ?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல... இன்னிக்கு பிரியா கல்யாணம் போயிட்டு வந்தேன்லே... அங்கே ரொம்ப நாள் கழித்து friends எல்லாம் பார்த்த சந்தோஷம் தான்.”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“ஒ.. கல்யாணம் நல்ல நடந்ததா?”
“ஹ்ம்ம்..” என்றவள், “அப்புறம் தப்பா எடுத்துக்காதீங்க .. நான் அங்கே எல்லாரும் கம்பல் பண்ணதாலே டான்ஸ் பண்ணேன் “
“ஹே.. இதுலே என்ன இருக்கு ... நீயும் எங்கிட்ட சொல்லிருக்க.. உனக்கு டான்ஸ் தெரியும்ன்னு... நாந்தான் பார்க்க முடியாமல் இருக்கேன்.. அத வீடியோ எடுத்து இருக்காங்களா?”
“ஆமாம்.. “
“எனக்கு நீ அனுப்பி விடு.. “ என்றவன் , மேலும் கொஞ்ச நேரம் அவளோடு அவன் ஆபீஸ் கதை எல்லாம் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போ “ப்ரயு, நான் இங்கே கொஞ்சம் கொஞ்சம் ஸெல்ப் cooking பன்றேன்லே... நேத்து .. என் friends வீட்லே patlock பார்ட்டி பண்ணோம் .. நான் நம்ம வீட்லேர்ந்து பருப்பு உருண்டை குழம்பும், பால் பாயசமும் எடுத்துட்டு வரேன் சொல்லிட்டேன்.. எப்படியோ நெட் லே நோண்டி .. ரெண்டையும் பண்ணி எடுத்துட்டு போயிட்டேன்.. அங்க போய் பார்த்தா ... பருப்பு உருண்டை எல்லாம் கரைஞ்சு குழம்பே இல்லாம..அத கூட்டு மாதிரி பிசஞ்சு சாபிட்டோம்.. சரி பாயாசமாவது நல்ல வந்துருக்கும் நு பார்த்தா அது ஒரு மாதிரி வாசனை அடிச்சது ... என்னனு பார்த்தா மில்க் maid க்கு பதிலா, பட்டர் போட்டு பண்ணிருக்கேன்.. “ என்று கூற
“ஆதிப்பா.. இப்படி எல்லாமா பண்ணுவீங்க.. “ என்று ப்ரயு குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள், அவள் சிரிப்பதை ஆசையாய் பார்த்திருந்தான் ஆதி.
ஆதியின் கண்களில் கண்ணீர் வந்தது. கல்யாணமான புதிதில் அவள் கலகலன்னு சிரிச்சது .. அதுக்கு பிறகு ..இப்போதான் அவள் சிரித்து பார்க்கிறான்.. மேலும் அவளின் ஆதிப்பா அவனை நெகிழ்த்தியது.
மேலும் கொஞ்ச நேரம் மற்றவர்களின் சொதப்பல்களை கூறி, அவளை சிரிக்க வைத்த பின் தான் .. இருவரும் பேசி முடித்து வைத்தனர்.
இருவருக்குமே அன்று இரவு நிம்மதியான உறக்கம் .. ப்ரயு சிரிப்பதை அவள் மாமியார் பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சம் நிம்மதியாக கூட இருந்தது. அவர் சுயநலவாதியே தவிர, கெட்டவர் இல்லை. பிறரின் மகிழ்ச்சி காண பொறுக்காதவரும் இல்லை. என்ன தன் பெண்ணின் மேல் பாசம் அதிகம்.
இவர்கள் திருமணம் முடிந்து, ஆதி கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன்னாடி சென்ற வருட பர்த்டே வந்தது.
அன்றைக்கு பார்த்து ஆதிக்கு விசா இண்டர்வியு வர, அவன் காலையில் சென்றவன் மாலையில் தான் வந்தான். ப்ரயு யாரிடமும் சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் எல்லோரும் நேரில் வந்து வாழ்த்தவே , அவனுக்கு தெரிந்தது. பிறகு எல்லோரையும் ஹோட்டல் அழைத்து சென்றவன், பிரயுவை மட்டும் தனியாக பைக் கில் கடற்கரைக்கு அழைத்து சென்றான்.
ஒருமணி நேரம் இருவரும் அங்கே செலவு செய்து விட்டு வந்தனர். அவளுக்கு எதாவது வாங்கி தருகிறேன் என்றதற்கு, கல்யாணத்திற்கு எல்லாம் வாங்கிஇருப்பதால் ஒன்றும் வேண்டாம் என்று விட்டாள்.
இந்த வருட பிரயுவின் பர்த்டேவிற்கு ஆதி அழகான necklace ஒன்று அனுப்பி இருந்தான். அவளும் அன்று இரவு பேசும்போது அதை அணிந்து காண்பித்தாள்.
ப்ரியாவிடம் அவள் கேட்டபடி. பிரயுவின் டான்ஸ் வீடியோவை அனுப்பி இருந்தாள். அதை ஆதிக்கு மெயில் அனுப்பி இருந்தாள் ப்ரயு,
அவளின் பாவமும், ஏக்கமும் பார்த்த ஆதியின் மனதில் அவளோடு எப்போ சேர்ந்து வாழ்வோம் என்ற ஏக்கம் தோன்றியது. தினமும் இரவில் அந்த வீடியோ பார்த்துவிட்டுத்தான் அவன் உறங்குவதே.
நாட்கள் பிரச்சினை இல்லாமல் நகர்ந்தது. வித்யா குழந்தைக்கு மூன்று மாதம் முடியும் போது அவள் வீட்டில் கொண்டு விட்டனர். செய்யும் சீர் முறையும் சிறப்பாகவே இருக்கவே அவள் மாமியார் ஒன்றும் சொல்லவில்லை.
இப்போது பிரயுவின் தங்கைகள் இருவரும் உண்டாயிருக்க, ப்ரயு சென்று பார்த்து வந்தாள்.
ப்ரயு பழைய படி ஞாயிறு அவள் பெற்றோரை பார்த்து வந்தாள். பவித்ரா, தாரிணி இருவரும் மசக்கைக்காக தாய் வீடு வந்திருக்க, பிரயுவும் மகிழ்ச்சியோடு அவள் செல்லும் நேரங்களில் கழித்தாள்.