01.இது பேய்க் காதல் - புவனேஸ்வரி
நிலமெனும் காதலியை
நெஞ்சோடு அணைக்க வழி இல்லையே!
கலங்கி நின்ற ஆகாய தேவனுக்கு
சலனம் மனதினுள்!
கண்ணெதிரே நின்றாலும்
கைநிட்ட வழியில்லை
மனமெங்கும் நீ இருந்தும்
மணந்திடவும் வழியில்லை!
இயற்கையில் உறைந்திடும் உணர்வு காதல்,
இயற்கைக்கே காதல் வந்தால்?
தாபங்கள் எல்லாம் கருமேகம் ஆகிட,
ஆசையெனும் காற்று தாபத்தை சோதிக்க,
சூரியன் எனும் தந்தை,
உதிக்காத நள்ளிரவில் காதலியுடன்
உரையாடலை தொடக்கினான் வான்மகன்!
காதல் மலர்ந்தது,
மாரியும் பொழிந்தது,
இணைய முடியாதவனின் ஈர முத்தங்களில்
நடுங்கி துடித்தாள் நிலமகள் !
அவள் அழகிய கோலம் மோகத்தை தூண்டிட,
அடைமைழையாகினான் வானதேவன்!
இயற்கையின் காதல்கதை தொடங்கியது அங்கே
இவன் காதலும் எவ்வழியோ இங்கே?
உள்ளம் குளிரும் மழைத்துளி
செய்கிறதோ அவனது தனிமையை கேலி?
புரியவில்லை அவனுக்கு!
புரிந்தும் மாற்றமில்லை அவன் வாழ்வுக்கு!
இன்னொரு பக்கம்,
இருள் சூழ்ந்த மாளிகை வீடு
அங்கு அவளின் பாதச்சுவடு!
அறியவில்லை அவன்!
அறிந்திருந்தால் என்செய்வான் தெய்வீகன்?
தொடரும்
{kunena_discuss:1072}