மெல்லக்கண்களை கசக்கியவாறு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீங்க என் மேல் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க?” குரல் குழைய சொன்னாள்.
அவன் மயங்கிப்போனான்.
“ஆனால் எனக்காக நீங்க எல்லாத்தையும் இழந்துட்டு வர்றதை நினைச்சாதான் எனக்கு அழுகையா வருது.”
“என்ன பண்ண சொல்றே மாலு? அவர் தான் நம்ம காதலை புரிஞ்சுக்கமாட்டேங்கிறாரே. அவர் சொல்ற பெண்ணைதான் நான் கல்யாணம் செய்துக்கனுமாம். உன்னை என்னால் எப்படி விடமுடியும்?”
“எனக்குப் புரியுது டார்லிங். ஆனால் நீங்களும் ஒன்னை புரிஞ்சுக்கனும்.”
“என்ன?” எரிச்சலுடன் கேட்டான்.
“எவ்வளவு வசதியா வாழ்ந்தவர் நீங்க? எனக்காக எல்லாத்தையும் இழந்துட்டு வர்றேன்னு சொல்றீங்களே? உங்களால் அந்த வசதி எல்லாம் இல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னா எப்படிப்பா?”
கோபத்துடன் மகள் பேசிவிட்டு சென்றாலும் மகள் புகுந்த வீட்டில் சந்தோசமாய் வாழ்கிறாள் என்ற நிறைவு அவருக்கு கிடைத்தது. ஆனால் பின்னொரு நாளில் தானே அந்த வீட்டில் வேலைக்காரியாகவாவது இருக்கிறேன் என்று கெஞ்சிக்கேட்கும் நிலை மகளுக்கு வரும் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை.