உயிர் எழுத்தும் உயிர் கொடுத்தவளும்
அவள் தான் அன்னை
ஆண்டவனின் மரு உருவமும் அவள் தானே!
இறப்போடு போராடி என்னை
ஈன்றெடுத்தவளும் அவள் தானே!
உதிரத்தை உணவை மாற்றி என்னை
ஊட்டி வளர்த்தவளும் அவள் தானே!
எல்லா நிலைகளீளும் எனக்கு
ஏணியாய் இருந்தவளும் அவள் தானே!
ஐந்தறிவாளனாய் இருந்த எனக்கு
ஒரு அறிவு கூட்டி ஆறறிவாளனாய் ஆக்கியவளும் அவள் தானே!
ஓராயிரம் ஆண்டாயினும் அவளை நான் மறப்பேனா!
ஔவை சொல் "தாயிற் சிறந்த கோவிலுமில்லை" வழி நடப்பேனே!