சிறகடித்துச் சென்ற உறவுக்கு...
யாரையும் நம்புவதில்லை
எதற்கும் அழுவதில்லை
குற்றவுணர்வுகளை சமநிலையில் வைக்கிறேன்...
துணைக்கு புத்தகங்களும்
விதிகளை மீறுவதற்கு நவினமனங்களும் சாதகமாயிருக்கிறது...
இருந்தும் எவ்வளவு செய்தும்
நினைவுகள் இன்னமும் இருக்கிறது -அது
உன்னை எப்பொழுதும் அழைத்து வருகிறது
எப்போதும் இருக்கிற இந்த வெயிலைப்போல
எப்பொழுதாவது வருகிற இந்த மழையும் கூட...
தவிர்க்க முடியாத உன்னை ஒப்புக்கொள்ளாத மனம்
இருக்கட்டுமென சொல்லிக்கொண்டிருக்கிறது.....
இன்னும் வாழ்வதற்கு நாட்களிருக்கிறது!
உன் நினைவுகளும்!!!!