(Reading time: 1 minute)

 

சிறகடித்துச் சென்ற உறவுக்கு...

 

யாரையும் நம்புவதில்லை 

எதற்கும் அழுவதில்லை 

குற்றவுணர்வுகளை சமநிலையில் வைக்கிறேன்...

துணைக்கு புத்தகங்களும் 

விதிகளை மீறுவதற்கு நவினமனங்களும் சாதகமாயிருக்கிறது...

இருந்தும் எவ்வளவு செய்தும் 

நினைவுகள் இன்னமும் இருக்கிறது -அது 

உன்னை எப்பொழுதும் அழைத்து வருகிறது 

எப்போதும் இருக்கிற இந்த வெயிலைப்போல 

எப்பொழுதாவது வருகிற இந்த மழையும் கூட...

தவிர்க்க முடியாத உன்னை ஒப்புக்கொள்ளாத மனம்

இருக்கட்டுமென சொல்லிக்கொண்டிருக்கிறது..... 

இன்னும் வாழ்வதற்கு நாட்களிருக்கிறது!

உன் நினைவுகளும்!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.