காதல் பரிசு - ஜெயா
பத்து மாதம் கருவறையில் பொத்தி வைத்த அன்னைக்கு
பரிசாக வலி தந்து வெளி வந்த நேரம்.......
பெண்ணாய் பிறந்ததற்கு படப் போகும் துன்பத்தை யான் அறியேன்
அறிந்திருந்தால் தோன்றிய கருவறையை நிம்மதியாய் உறங்கும்.....
கல்லறையாய் மாற்றி இருப்பேன்.
என்ன பாவம் செய்தேனடா???
பெண்ணாய் பிறந்ததால் உனக்கு அன்னையானேன்...
உன் உடன் பிறந்ததால் உனக்கு சகோதரியானேன்...
உன் சுக துக்கத்தைப் பகிர உனக்கு தோழியானேன்...
உன் தலைமுறையை வளர்க்க உனக்கு தாரமானேன்...
உன் மரியாதையை காக்க மகளாய் தோன்றினேன்.....
இத்தனை உறவுகளாய் உன்னுடன் இருப்பவளும் ஒரு பெண் தானே...
எப்படி மறந்தாய் இந்த உண்மையை!!!!!!!!
பெண்களை சதையும் குருதியாய் மட்டும் பார்க்கும் ஈனர்களே.....
உன் உடம்பில் ஓடும் குருதியின் ஆனிவேர்
ஒரு பெண் என்பதை எக்கணம் மறந்தீர்!!!!!!!!!!
மனதாலும் உடலாலும் எம்மை கொள்ளும் பொழுது உனக்கு நினைவில்லையோ??
மரணத்திற்கு பிறகும் நீ மடி சேரும் இடம் பெண் என்பது!!!!!!
எம் குலம் வதைப்படப் போவது தெரிந்துதான் அன்றே.....
எமக்கு கல்லிப்பால் கொடுத்து காத்திறோ?????????