(Reading time: 1 minute)

!!மேடை பேச்சு!! - கஜலக்ஷ்மி 

மேடையில் -

பெண்ணியம் விடுதலைப்பற்றி பேச பெரியாரை துணைக்கு அழைப்பர் 

புதுமைப்பெண்னெண புரட்சி படைக்க வேண்டும் என்று பாரதியாரை துணைக்கு அழைப்பர் !

புலமையுடனும் புத்திகூர்மையுடன் விளங்க வேண்டும் என்று அவ்வையை துணைக்கு அழைப்பர் !

வீரத்துடனும் விவேகத்துடனும் விளங்க வேண்டும் என்று ஜான்சி இராணியை துணைக்கு அழைப்பர் !

உரை முற்று கைத்தட்டல் பெற்று தோள் துண்டை உதறி

இல்லம் இனிது சென்று தம் இல்லத்தரிசையை அழைக்க -

’ஏய் ! மண்டு’ என ஆண் ஆதிக்கத்தை செலுத்துவர் எஞ்ஞான்றும் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.