!!மேடை பேச்சு!! - கஜலக்ஷ்மி
மேடையில் -
பெண்ணியம் விடுதலைப்பற்றி பேச பெரியாரை துணைக்கு அழைப்பர்
புதுமைப்பெண்னெண புரட்சி படைக்க வேண்டும் என்று பாரதியாரை துணைக்கு அழைப்பர் !
புலமையுடனும் புத்திகூர்மையுடன் விளங்க வேண்டும் என்று அவ்வையை துணைக்கு அழைப்பர் !
வீரத்துடனும் விவேகத்துடனும் விளங்க வேண்டும் என்று ஜான்சி இராணியை துணைக்கு அழைப்பர் !
உரை முற்று கைத்தட்டல் பெற்று தோள் துண்டை உதறி
இல்லம் இனிது சென்று தம் இல்லத்தரிசையை அழைக்க -
’ஏய் ! மண்டு’ என ஆண் ஆதிக்கத்தை செலுத்துவர் எஞ்ஞான்றும் !