கவிதை - பெற்றோர் புரிந்து கொள்வார்களோ??? - சுமதி
வன்கொடுமை
செய்யப்பட்டதும்
ஒரு பெற்றோரின்
குழந்தை தான்
வன்கொடுமை
செய்யப்படுவதும்
ஒரு பெற்றோரின்
குழந்தை தான்
இவர்களின்
பெற்றவர்களின் தப்பா??
இல்லை
வளர்த்தவர்களின் தப்பா??
எந்த குழந்தையும்
இந்த மண்ணில்
பிறக்கையில்
நல்ல குழந்தை தான்
அவர்கள் நல்லவர்கள்
ஆவதும் கெட்டவர்கள்
ஆவதும் பெற்றோர்
வளர்ப்பில் தான்
இதனை எத்தனை
பெற்றோர் புரிந்து கொள்வார்களோ???
{kunena_discuss:779}