கவிதை - விருப்பம் - சுமதி
நீ இல்லை என்றால்
வாழ்க்கை இல்லை என்று
சொல்ல மாட்டேன்
அது அதன் பாதையை
நோக்கி செல்லும்
ஆனால் உன்னிடம்
விருப்பத்தை கேட்காமல்
விலகிச் சென்றுவிட்டு
வாழ்க்கையில் ஏதேனும் ஒரு
சூழ்நிலையில் நீ இருந்திருக்கலாம் என
நினைத்தால் அதன் பின்
வாழ்க்கை நரகம் ஆகிவிடும்
அதற்காகத் தான் இந்த கேள்வி?
{kunena_discuss:779}