குலம் காக்கும் சாமி - சுதாகர்
உன்னை என் நாயகன்
என்று சொல்ல
முடியாது
நீ என் கடவுள்
உன் பாதங்கள்
தேய தேய என்னை
மெருகேற்றினாய்
உனக்கு பிடித்ததை விட
எனக்கு பிடித்தை தான்
நீ அதிகம் விரும்மினாய்
நான் ஆசை பட்டதை
வேண்டாம் என்று சொன்னாலும்
கடைசியில் சரி போய்
வாங்கிக்க என்று சொல்லாமல்
இருக்க மாட்டாய்
எனக்கு எது வேண்டும் வேண்டாம்
என்று முடிவேடுப்பதில்
உனக்கும் பங்குண்டு
ஏனேனில் நீ என்னை
கூட்டிச்சென்ற வாழ்க்கை இது.
ஒவ்வொரு முறையும்
நீ அதை செய்யாதே இதை செய்யாதே
என்று சொல்லும் போது
உன் மேல் கோபம் வரும்
ஏன் சில சமயம் திட்டியதும் உண்டு
உனக்கு வெள்ளை வேட்டி எடுத்ததைவிட
எனக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தது அதிகம்
குலசாமியை யாரும் நேரில் கண்டதில்லை
ஒரு நம்பிக்கை
நம்மை காக்க ஒரு சாமி இருக்கிறது என்று.
அப்படி நான் கண்ட சாமி நீ
என் நலனுக்காக எப்போது குலசாமியிடம்
கொரிக்கை வைக்கும்
என் குலம் காத்த(காக்கும்) சாமி நீ.