பார்த்த நாள் முதல் - அனு.ஆர்
பார்த்த நாள் முதல்
பின்னால் வந்தாய்
பாவை என்னை
படையெடுத்தாய்.
கடுப்படைந்த நான்
கடைசியில் செருப்பெடுத்தும்
மிரட்டிப் பார்த்தேன்
நின்று நெற்றி சுருக்கி
பரிதாபமாக பார்த்தாயே தவிர
பழக்கத்தை மாற்றவில்லை.
அன்று கவிழ்ந்தேன் நான்.
அப்புறமென்ன
தினம் தோறும்
சாலையில் சந்தித்தோம்
சோலையில் சுற்றினோம்.
நன்கு வளர்ந்தது
நம்மிடையே நம்பிக்கை.
இப்பொழுதோ
இருபது நாளாய்
உன்னை காணவில்லை.
கவலை கொண்டேன்.
தொங்கிய என் முகத்தை பார்த்து
தெருவோரத்து நங்கை
சொன்னாள்.
பக்கத்து வீட்டுகாரர்கள்
பாண்டிச்சேரி போய்விட்டார்கள்.
பணிமாற்றமாம்.
அது அவர்களது நாய்தான்
உங்களுடன் சுற்றுமே!!!!!!!