மரணிக்க மனமில்லை - தாரணி
கடந்து சென்ற
கடந்த காலங்களை
எதற்காகவோ திரும்பி பார்கிறேன் .....
மடிந்து போன நினைவுகள்
மேலெலும்பி மனதை-
பதம் பார்த்து
செங்குருதி வடிய
சிலையாய் போனேன்
நான்-
என் எண்ணங்களின் எழுச்சியில்
சுதந்திர பறவையாய்
சிறகடித என்னை
சிறகொடித்து சிறையில் இட்டதேனோ ???
சில நிதர்சனங்கள்
சில்லிட வைக்கும் நேரம்
மக்கி போன நினைவுகள்
தோண்ட தோண்ட தீராத
சுரங்கமாய் ;
வற்றாத ஊற்றாய்
மாரிபோனதேனோ ???
மீண்டும் மரணிக்க
மனமில்லாமல் -
இருட்டறையில் அடைகிறேன்
உணர்வுகளாகிய நான் ---..........