கனவுகள் - தாரணி
கவின் மிகு
இப்பூவுலகில்
கனவுகளுக்கா பஞ்சம்
இல்லை காணும்
மனிதர்களுக்கா பஞ்சம்......
ஏட்டுச் சுரைக்காய் போல்
எதிர்மறை எண்ணங்களும்
கற்பனை கனவுகளும்
கானல் நீராகிறது ---
பட்ட மரத்தை
கண்கள் குளமென
காத்துகிடந்து காக்கிறான்
பசுமை போர்த்த காண்கிறான்
ஏழை உழவனவன் ....
கடும் மழை குளிரில்
பட்டினி போர்வை கொண்டு
போவோரை பார்க்கிறான்
சாலையோர சிறுவன்
தானும் காண்கிறான்
நாழிகை அவர்களை
நின்று வியகவைபேன் என ----
ஏமாற்றுவோன் காண்கிறான்
ஏமாற்ற கோமாளிகள்
பலருண்டு என-பாவம்
எத்தனுக்கும் எத்தன்
உண்டென உணராமல்...
நவநாகரீக அறிவாளிகள்
உழவனை இகழ்கிறான்
கான்கிரீட் காடுகள்
புசிபதற்க்கு உகந்ததாக
பகல் கனா கண்டு ....
உறவுகள் பொய்மை
உணர்வுகள் மாயை
தன்னலம் பொது உடைமை என
காண்கிறான் நம்-
மான்புமிகு மனிதன்...
உன் உயர்வு
உன் கனவுகளின்
உயிர்ப்பில் புதையுண்டு
உயிர்ப்பிக்க காத்துக்கிடக்கிறது ..........
{kunena_discuss:779}