(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில்… - மீரா ராம்

07. துயரம் தான் அரிக்கிறது உயிரே

உன்னை நினைப்பதும் உனக்காக தவிப்பதும் தான்

என் வாழ்க்கையா???

உன்னுடன் பேசத்துடிக்குது மனமும் உடலும்…

தேகம் முழுவதும் உன் நினைவுகள் தான்

குருதியாய் ஓடுகிறது என்னவனே…

ஏனோ இன்று உன்னுடன் பேச என் நா எழுகிறது…

இன்றும் கண்களில் கண்ணீர் குளம்…

அன்று துடைத்து விட நீ இருந்தாய்…

இன்றோ ஆள் இல்லாமல் வழிந்தோடுகிறது

என் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில்…

கடவுளிடம் மன்றாடுகிறேன்…

முடியவில்லை என்னால்…

உன் நினைவுகள் பாராங்கல்லாய் மனதில்…

இறைவனே ஒன்று உன்னிடம் என்னை எடுத்துக்கொள்…

இல்லையேல் அவனிடம் என்னை ஒப்புவி…

இரண்டும் இல்லாத இந்த கொடிய நிலை

எனக்கு ஏன் தருகிறாய் ஆண்டவனே….

கண்ணீரும் கவலையும் தான் எனக்கா???

சந்தோஷமும் சுகமும் எனக்கு இல்லையா????

நான் என் பாவம் செய்தேன்????... காதலனே…

என் மேல் அக்கறை காட்ட நீ கூட இல்லாமல் போன

துயரம் தான் அரிக்கிறது என்னை… உயிரே….

Avalin diary'l - 06

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.