(Reading time: 2 - 3 minutes)

08. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

நாளும் எந்நாளோ...!!!…

Ilam poovai nenjil

நெஞ்சம் முழுக்க ஆசைக் கோலங்களின் வண்ணங்கள்

அழகாய் உயிரில் படர்ந்து பரவியிருக்கையில்

கண்களும் கனவுலகில் சஞ்சரித்து வலம்வர

எண்ணங்களும் உன் காலைச் சுற்றும் நாய்க்குட்டியானால்,

பேதை நான் மட்டும் என்ன செய்திடுவேன்?...

எனக்குள் கேள்விகள் கேட்டும் என்ன பயன்?...

விடை கிட்டிடுமா என்ன?... உடனே?...

ஒரு விநாடி நான் விழி மூடிக்கொண்டாலும்

உள்ளத்தின் அறையில் உன் விழிகளின் பளபளப்பினை

நான் காண்பதும் என்ன விந்தையோ!!...

ஆழ்ந்த சுவாசம் தன்னில் உந்தன் வாசத்தினை

நான் உணர்வதும் என்ன மென்மையோ!!!....

நேசம் மட்டும் என்னில் நிரப்பி

காத்துக்கொண்டிருக்கிறேன் உனக்காக…

உண்மைதான் காத்திருக்கிறேன் தான்…

ஆனாலும் பாடாய் படுத்துகிறதடா இந்த காதல்…

முடிவே இல்லாது போய்க்கொண்டிருக்கும்

சாலையைப் பார்க்க நேரும்போது

இதயம் எகிறித்தான் குதிக்கிறது…

என்னவென்று சொல்லிட அந்த உணர்வை?...

உன்னிடம் வாய்விட்டு கேட்பேனோ?...

இல்லை மௌனத்தின் பின் ஒளிந்து கொள்வேனோ?...

தெரியவில்லையடா… கண்ணா….

ஏக்கம் பிறந்து என்னை சாகடிக்கிறதடா

கொஞ்சமும் பாரபட்சம் இல்லாது…

எதற்கடா இத்தனை தவிப்பு தருகிறாய் எனக்கு?..

சுற்றியிருப்பவர்கள் யார் பார்த்தால் தான் என்ன?...

மண்ணிற்கும் வலிக்காது, தார் சாலையின் ஓரத்தில்

கதைகள் பல பேசி சிரித்து நடக்கையில்,

உன் விழிகளுக்குள் கரைந்து போனவளாய்

நானும் நிற்கையில் என் தவிப்பிற்கு விமோஷனம் தருவாயா?

மெல்ல உன் விரலோடு என் விரல்களை இறுக பிணைத்து…

சிறுகுழந்தையாய் மனமும் அதனையே சுற்றிவர,

உன் கரம் என் விரல் பற்றும் நாளும் எந்நாளோ!!!! ராஜா….!!!!

பூ மலரும்……….

Ilam poovai nenjil 07

Ilam poovai nenjil 09

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.