கவிதை - என்னோடு சேரடா - புவனேஸ்வரி கலைசெல்வி
கடல் அலையென நீதான்
நனைத்து நனைத்து போக
பின்வாங்கிடாமல் மூச்சு வாங்கி நிற்பேன்
கடல் மண் என நான்தான்
பிறந்திட மாட்டேனோ
உன் முத்தம் தாங்கி
உன்மத்தம் ஆக!
விரல் கோர்த்து சில நாள்
விதியோடு சில நாள்
புரியாமல் வாழ்வோம்
தொலைந்தே தான் மீழ்வோம்
ஒன்றேதான் உலகம்
இரு தரப்பு ஏனடா ?
ஒன்றேதான் காதல்
இருவராய் வாழ்கிறோம் ஏனடா?
உடையோடு நூலாய்
கண்ணோடு காட்சியாய்
காற்றோடு குளிராய்
என்னோடு சேரடா !
{kunena_discuss:779}