கவிதை - தொலையும் எண்ணம் தொலைவதில்லை - புவனேஸ்வரி கலைசெல்வி
சில உரையாடல்கள் முடிந்து போவதில்லை
சில மௌனங்கள் ஓய்வதே இல்லை
எப்படியாயினும் , அது உன்னோடு என்பதினால்
வாழ்க்கை சலிப்பதில்லை !
உன்னிடம் நான் சொல்லாத வார்த்தைகள் இல்லை
இருப்பினும் தயக்கத்திற்கு முடிவில்லை !
கோடி வார்த்தைகள் சொல்லி முடித்தும்
சொல்லாத ஒன்று சூழல் காற்றென என்னை பந்தாட
திணறலுக்கும் உளறலுக்கும் பஞ்சமே இல்லை !
என் மயக்கங்களை நீ அறியாதவன் இல்லை!
பெண்ணின் தயக்கங்களை புரியாதவன் இல்லை !
இருந்தும் என்னை ஆட்டி வைத்து ரசிப்பதில்
என்னதான் இன்பமோ ?
நீ திருடன் என்று தெரிந்தும்
என்னை தொலைப்பதை நிறுத்தும் எண்ணமில்லை !
{kunena_discuss:779}