02. ராதா கிருஷ்ணன் காதல் - ராதை கேட்கிறாள் - புவனேஸ்வரி
மூங்கிலே உன்னிடம் ராதை கேட்கிறேன்
அவன் விரல்பட்டு நீ உருகினாயா ?
அவன் இதழ்உரச நீ உயிர்பெற்றாயா ?
மூங்கிலாய் இருந்த நீ எப்படி குழலானாய் ?
மயிலே பெண்மயிலே உன்னிடம் ராதை கேட்கிறேன்
உன் மயில்பிலி ஒன்று காற்றில் பறந்துவந்த காட்சி என்னவோ ?
மழை வந்து நனைத்தாலும் தோகைவிரிக்கா தேவதை நீ
கள்வனவன் என்ன சொல்லி உன் சிறகை வாங்கினான் ?
வானே உன்னிடம் ராதை கேட்கிறேன்
நீலத்திற்கு இலக்கணம் காட்டிய அழகன் நீயன்றோ ?
என்ன சொல்லி அவன் உன்னிறம் வாங்கினான் ?
அவன் எதைச்சொல்ல கேட்டு நீ மாலையில் முகம் சிவந்தாய் ?
நிலமே உன்னிடம் ராதை கேட்கிறேன்
பொறுமையில் அவன் உன்னை மிஞ்சியவனாம்
தவழ்ந்தாலும் துள்ளினாலும் தாங்கிடுவாயே ?
நீ தாங்கும் பாரத்தை அவன் தாங்கலாகுமோ ?
பொய்கையே உன்னிடம் ராதை கேட்கிறேன்
உன் தாமரைகள் நடத்தும் காதல் நாடகம் அறிவாயா ?
நேற்றுவரை ஆதவனுக்கு காத்திருந்த மலர்கள்
இன்று அவன் பாதம் பட்டதும் இரவில் பூத்ததென்னவோ ?
" அணைக்கிறான்மாதவன் " கவிதையில்நண்பர்கள்அளித்தஊக்கத்தைவைத்தேதொடங்குகிறேன்இந்த " கண்ணன் - ராதையின்காதல்பயணத்தை ".. இதைகவியென்றொ அல்லதுகதையென்றொ திடமாய்சொல்வதற்குநாணுகிறேன். ஏற்கனவேசொல்லியதுபோலஇவர்களின்உறவைஎழுதுவதற்கேபெரியதைரியம்வேண்டுமல்லவா ? ஆக, எனதுகற்பனையில்இருக்கும்கண்ணனும்ராதையும்அவ்வபோதுஎன்னிடம்சொல்லும்கதையைநான்உங்களோடுபகிர்ந்துகொள்கிறேன். நேற்றுராதைகேட்டகேள்விகளைஉங்களிடம்சேர்த்துவிட்டேன். கண்ணனிடம்விடைகளைப் பெற்றுவிட்டுஅடுத்தகவியோடுவருகிறேன் . நன்றி
{kunena_discuss:779}