அன்பு ஆகாயம் என்றால்
அது முடிவில்லாமல் படர்ந்திருக்கும் !
அன்பு நீர் என்றால்
அது பிரிக்கும்போதும் இணையும் !
அன்பு நிலம் என்றால்
அது துயரங்களையும் தாங்கும் !
கண்ணன் நிலமானான்
ராதை அவன் மடியில் பாரம் இறக்கினாள் !
கண்ணன் ஆகாயம் ஆனான்
ராதை நீலநிறத்தின்மீது ப்ரியம்கொண்டாள் !
கண்ணன் நீரானான்
ராதை அவனை கண்ணீராய் மாற்றி கன்னங்களில் பிணைத்துகொண்டாள் !
கண்ணன் நெருப்பானான்
ராதை அவனுக்குள் குளிர் காய்ந்தாள் !
இன்று ,கண்ணன் காற்றானான்
உருவமில்லாமலும் காதல் வாழும் என உணர்த்துகிறான் !
யார் ராதை ?
மானிட பெண்ணா ? தேவலோக மங்கையா ?
உன் ஆருயிர் தோழியா ? இல்லவே இல்லை!
ராதையே கண்ணன் .கண்ணனே ராதை !
சூரியனின் பிம்பமே சந்திரன்
கண்ணனின் பிம்பமே ராதை !
இரண்டும் ஒன்றாய் கலந்த நிலையிது
கண்ணன் நடத்தும் காதல் கலையிது
இதில் கேள்வி கேட்க நீ யார் ?
பதில் உரைக்க நானும் யார் ?
புரிந்து கொள்வாயாக !
சேர்ந்து பிரியும் , பிரிந்து சேரும் இதயங்களுக்கு பாலமும் தேவையா ?
கேட்டது புள்ளிமான் கேள்வியை
உணர்ந்தாள் அருந்ததி உண்மையை !
திரும்பி நடந்தாள் நன்றி கூறி ,
அவள் பாதையை மறைத்தது காற்றில் பறந்துவந்த மயில்பிலி !
விக்கித்து திரும்பினாள் ஆச்சர்யமாய்
நின்றான் கண்ணன் அங்கு திவ்யஉருவமாய் !
மனம் குளிர்ந்தேன் அருந்ததி
உன் நட்பின் ஆழத்தில் !
கோபியர் என்னை அன்பிற்கினியவனாய் வேண்டினர்
நான் அன்பை வழங்கினேன் !
அண்ணன் என்னை சகோதரனாய் வேண்டினார்
நான் சகோதர பிணைப்பை வழங்கினேன் !
ராதை என்னை சரிபாதியாய் வேண்டினாள்
நான் என்னையே வழங்கினேன் !
நீ உன் தோழியின் நேசத்திற்காக நட்புடன் என்னை வேண்டினாய்
நான் என் நட்பை தருகிறேன் !
வா என்று அழைக்குமுன்னே
கண்ணன் உன் தோழனாய் துணையிருப்பேன் !
வழங்கினான் அருளை மாதவன்
சிலிர்த்தாள் அருந்ததி கண்ணீருடன் !
மயில்கள் நடனம் ஆடிட
வசந்தமாய் மாறியதே அவன் பாதம் பட்ட கானகம்!
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்
{kunena_discuss:779}