தாயுமானவருக்காக - புவனேஸ்வரி
கம்பீரமே தவமிருந்து
யாசகம் கேட்கும் கணீர் குரல்!
சூரியனையே எழுப்பி விடுவதற்காக
அதிகாலையில் மலர்ந்துவிடும் இவர் விழிகள் !
என் பெயரை ஒரே முறை அழைத்து
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விடுதலை கொடுத்திடுவார் !
அழுத்தமான பார்வையுடன்
மீசையை முறுக்கி புன்னகைபார்!
என் கண்களிலே பயம் பரவினால்
அடுத்த நொடி சாந்தமாகிடுவார் !
சமையலறை என்பது பெண்களின் உறைவிடம்
என்ற எழுதப்படாத சட்டத்தை தகர்த்து எரிவார் !
பசியை கிள்ளும் ருசி அவர் சமையலுக்கு மட்டுமே
சொந்தமான அடையாளம் !
வெளியில் செல்லும்போது எனக்கவர் சாரதி
நான் துவண்டுவிடும்போதெல்லாம் எனக்கவர் பாரதி !
இசையை எனக்கு கற்றுத்தந்தவர்
இதயத்தை பேணும் கலையிலும் கைதேர்ந்தவர் !
மன்னிக்க தெரிந்தவர்
மன்னிப்பு கேட்பதில் குழந்தையை போன்றவர் !
ஒரே அதட்டலில் அணுவையும் அதிர வைப்பார்
அதை ஒரே அணைப்பில் சமணப்படுத்திடுவார் !
இனி எத்தனை பிறவி எடுத்தாலும்
இவர் இரும்பு கரங்களில் நான் மழலையாய் தவழ வேண்டும் !
என்னுள் உறைந்திருந்து என்னை பேணிக்காக்கும் தாயுமானவரை
ஆயுள் உள்ளவரை பாரமென நினைக்காமல் சுமந்திட வேண்டும் !
தந்தையே ,
கடவுளுக்கெல்லாம் தந்தை யார் ?
கடவுளுக்கு தந்தையின் அன்பின் மகத்துவும் தெரியுமா ?
தாயுமானவனின் அன்பினை இறைவனுக்கு உணர்த்திடத்தான்
அவசரமாய் இறைவனடி சேர்ந்தீரோ ?
உங்கள் எண்ணம் ஈடேறட்டும்
தந்தையின் அன்பை உணர்ந்து
வருங்கலத்திலாவது இறைவன்
தந்தை - புதல்வர்களை பிரிக்காமல் இருக்கட்டும்!
அப்பா ... என் வாழ்க்கையில் வசந்த காலத்தை கொண்டு வந்தவர் .. எல்லா மகள்களுக்கும் அப்பா தான் முதல் காதல்ன்னு சொல்லுறதில் கொஞ்சம் கூட மிகையே இல்லை ! அனைத்து நண்பர்களின் தந்தைக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.!
{kunena_discuss:779}