சீதையின் மனமும் கல் மனமோ - புவனேஸ்வரி
விழிகளால் விவாகம் முடித்தோம்
விதியால் மீண்டும் இணைந்தோம்
ராமனே பதியென கொண்டபின்
விதியை வென்றிட தயங்குவேனோ ?
கடமைக்கு என்னவர் இசைந்து போகையில்
தலைவனின் துணையாய் நான் இணையாமல் போவேனோ ?
துயர் என்பது நிரந்தரம் -அதை
இராமனின் துணைவியாய் நின்று எதிர்கொள்ளாமல் போவேனோ ?
கானகமே எமது அகம் என்று முடிவானால்
எம் அகத்தின் ஐயனை பிரிவேனோ ?
துன்பம் எனும் ஓடைக்கு அஞ்சி
கோசலை மைந்தனெனும் சமுத்திரத்தை விட்டுத் தருவேனோ ?
இன்பம் மட்டுமே இல்லறம் என்று
சொல்வதும் நல்லறம் ஆகிடுமோ ?
தன்னில் இன்னோர் உயிராய் எமை ஏற்றப்பின்
இன்னல் கண்டு ஓடிடுவேனோ ?
இருளில் மறைகின்ற நிழலாய்
இடையில் வந்த உறவோ நான் ?
உயிராய் உணர்வாய் கலந்தப்பின்
பிரிவாய் என உரைப்பதும் தகுமோ ?
என்னில் பாதி பிரிந்து போகையில் -சிரித்திருக்க
சீதையின் மனமும் கல் மனமோ ..?
ஹாய் நண்பர்கள் .. அண்மையில் "சீதையின் ராமன் "தொடரில் இராமனுடன் சீதை கானகம் போக விழையும் அத்தியாயத்தை கண்டு இந்த கவி தோன்றியது .
{kunena_discuss:779}