முரண்பாடான விதிகள் - புவனேஸ்வரி
வார்த்தைகளின் வெற்றி அறிந்தவர்களுக்கு
மௌனத்தின் அவசியம் புரியும்!
மௌனத்தின் உச்சத்தை அறிந்தவர்களுக்கு
வார்த்தைகளின் தேவை விள(ல)ங்கிடும்!
வேண்டாம் என்ற உதறல்களில்
வாழ்க்கை தொடர்ந்திடும்!
வேண்டுமென முடிவெடுக்கும்போது
வாழ்வே முடிந்துவிடும்!
முன்னெச்செரிக்கை கொடுக்காமல்
முடிவுபெறும் முரண்பாடான விதிகள்!
{kunena_discuss:779}