உமர்க் கயாம் ஆக்கிவிட்டாய்.. - தங்கமணி சுவாமினாதன்
அடிப் பெண்ணே....
உன் விழி என்னும் வலைக்குள்-எனை..
எழ முடியாமல் விழ வைத்தாய்..
சலனமில்லா என் இதயத் தடாகத்தில்
காதலெனும் கல்லெடுத்து வீசி விட்டாய்...
வேலை தேடி அலந்து திரிந்த என்னை..
உன் காதல் வேண்டி உன் பின் சுற்றவைத்தாய்..
ஆதவனைச் சுற்றும் அகிலம் போல்-அழகியுனை..
காதல் காதலென நான் சுற்றி வந்தேன்..
கோயில் சுற்றும் பக்தனுக்கு கடவுள்..
தரும் வரத்தைப் போல்..
காதல் தேவதை நீ எனக்கு.. காதலெனும் வரம் தந்தாய்..
அருகருகே அமர்ந்து ஆயிரம் கதைகள் பேசினோம்..
கை கோர்த்துக் கடற்கரையில் கால்பதிய நடந்திட்டோம்..
காதல் வானில் கிளிகலென சிறகடித்துப் பறந்திட்டோம்..
ஆல விருட்சமாய் நம் காதலை ஆசையோடு வளர்த்திட்டோம்..
திடீரென என்னவாயிற்று என் காதலியே?
சந்திப்பை தவிர்த்திட்டாய்...அலை பேசியின்
அழைப்பைத் துண்டித்தாய்..மௌனித்து இருந்திட்டாய்..
புரிய வில்லையடி எனக்கு..குழப்பம் தருகிறாய் எதற்கு?
உனைக் காணா துன்பத்தில்-என் முகத்தில்
காடாய் வளர்கிறது மீசை..முள்ளாய் முளைக்குதடி தாடி..
பயம் வருகிறது நெஞ்சில்..அடைந்து கிடக்கிறேன் வீட்டில்..
ஐயோ!1இதென்ன?பதிவுத் தபாலில் "பத்திரிக்கை"..
அடிப்பாவி..நீ இன்னொருத்தன் மனைவியாகி..
முழுதாய் மூன்று நாள் ஆகி விட்டதா?..
என்ன பாவம் செய்தேன் நான்?
சும்மாக் கிடந்த என்னைத் தேவதாஸாய் மாற்றி விட்டாய்..
"மதுக்கிண்ணம்" ஏந்த வைத்து.."உமர்க் கயாம்" ஆக்கிவிட்டாய்..
காதலன் ஏமாற்றி விட்டதாக காதலி புலம்புவதையே எப்போதும் படிப்பதால் ஒரு மாறுதலுக்காக காதலன் புலம்புவது போல்....சரியா? நன்றி...
{kunena_discuss:779}