(Reading time: 2 - 3 minutes)

ஏனடா எனக்குள் வந்தாய் - புவனி

yenada enakul vanthai

சிந்திவிட்ட பணிதுளியாய் சிதறாத காதலாய்

எப்படி வந்தாய் எனக்குள் நீ???

கோபம் கடந்த கெஞ்சலிலா..........

தாயை மீஞ்சும் பாசத்தில இல்லை

தந்தையை மீஞ்சும் அரவணைபில்லா

யாரிடம் கேட்பேன் நான்???

உன்னை ஏன் எனக்கு பிடித்ததென்று

ஏனடா எனக்குள் வந்தாய்.............

உன் உயிர் கொண்டு என் உயிர் பறிக்கவா

உன் நிழல் கூட என் நிஜமாய் மாறவா ஏன்???

உனக்குள் என்னை புதைத்துக்கொண்டு

என்னிடமே எனை தர மறுக்கும் கள்வனா? இல்லை

என் உயிரையும் சேர்த்து கரு சுமக்கும் காதலனா?

யார் நீ ????...........

உன்னுடன் மட்டும் சண்டை போட தோன்றுகிறது

ஜெயிப்பதற்கா இல்லை தோற்பதற்கா???

தோள் சாய நீ கிடைத்தல் மீண்டும் குழந்தையாகி

உன் கைகோர்த்து காலமெல்லாம்

உன் காதல் எனும் கருவறையில் இருந்துகொண்டு

கதை பேச தோனுதடா ஏன்??

வார்தைகளே இல்லா மொழியில் வாக்கியமாய் இருந்துக்கொண்டு உன் வாய்மொழி மட்டும் கேட்க தோனுதடா ஏன்???

கேள்விகள் மட்டும் எனக்குள் கொண்டுளேன்

என் பதில்கள் யாவும் நீயாய் இருப்பாய்

என்ற தைரியதில் தானோ............

ஹாய் ஃபிரண்ட்ஸ் டுடே கிளாஸ் செம போரிங் எவ்ளோ நேரம் தான் வெட்டிய இருக்குறதுனு திங் பண்ணி சும்மா எழுதுன கவிதை இது. என் ஃப்ரெண்ட் டாம்(dk) லவ் ஃபெய்லியர்ர பத்தி கவிதை எழுதபோறேனு சொன்னா ஷோ நாம டாம்க்கு ஆப்போஸிட்டா எழுதுவோம்னு விளையாட்ட ட்ரை செஞ்சு இருக்கேன்  குற்றம் குறைகள் இருந்தால் மன்னிக்கவும் அருவா பார்சல்லாம் அப்பறமா வாங்கிக்கிறேன். பை பை............  

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.