பெண்கள் - நிலவினி
நிலாவாகி ஒளிரிந்தாகி விட்டது.........
சுய ஒளி இல்லமால்....
தென்றல் ஆகி வீசியாகிவிட்டது......
எதையும் அசைக்கும் வலு இல்லமால்......
தெய்வமாகி அருளியாகிவிட்டது......
குற்றங்களை காணாமல் கல்லாகி உறைவதற்கு ......
பூமியாகி பொறுத்தாகிவிட்டது.........
குமுறல்களை உள்ளடக்கி.புகைவதற்கு ......
பூவாகி மலரந்தாகி விட்டது......
அலங்கரிதே வாடிப் போவதற்கு.....
நதியாகி ஓடியாகி விட்டது.....
செழிக்க வைத்தே வறண்டு போவதற்கு.....
பறவைகளாகி சிறகடித்தாகி விட்டது....
சக மிருங்களின் வேட்டைக்கு அஞ்சுவதற்கு.....
எல்லாவற்றின் இயக்கமாக இணைந்தாகி விட்டது.......
இயல்பான இயக்கத்தை மறந்து.........
இதில் பெண் என்று பெண்ணாக மாறுவாளோ???????
பெண்ணாக வாழ்வதற்கு????
பெண்கள் தின வாழ்த்துக்களை விட
தினம் பெண்களை..
பெண்களாக வாழ விடுவது
சிறப்பு....!