கவிதை - தாமரை இலைத் தண்ணீர் - ராஜலக்ஷ்மி
முகமூடிகளுக்கு மத்தியில்
முழு நிர்வாணமாய் நான்..
அலை கடல் கலந்த பின்னும்
அறம் மாறா மழைத்துளி நான்...
இசையோடு இணைய இயலா
குயில் பாட்டு நான்...
உல்லாச வாசிகளின் ஊரில்
செல்லாக் காசு நான்...
பிழைத்தல் கலையில் பட்டம் பெறா
பாமரக் கலைஞன் நான்...
மண்ணுக்கடியில் புதைந்தழுவதும் நான்..
விண்ணைத்தாண்டி சிறகடிப்பதும் நான்..
இப்புவியில் நிலைகொள்ள
விதித்திட்ட கோட்பாடுகளில்
பொருந்தா புது விதி நான்!
{kunena_discuss:779}