கவிதை - படைத்தவனின் பங்காளி - ராஜலக்ஷ்மி
வண்ண வண்ண பூக்கள் தந்தாய் என்
எண்ணம் எங்கும் மலரச்செய்ய
சின்ன சின்ன தூறல் தந்தாய் என்
சிந்தை எங்கும் குளிரச்செய்ய
கவலையுற்ற பொழுதெல்லாம் நெஞ்சை
தென்றல் தன் கை கொண்டு வருடிச்சென்றாள்
மழலை தனை காணுகையில் மனதின்
மாசகற்ற எனைப் பணித்தாய்
இரவுக்கோர் விளக்காம் பால் நிலவு தந்தாய் அதன்
ஒளியை பருகிட இரு கண்கள் தந்தாய்
தெவிட்டாத அன்னையின் அன்பு தந்தாய் அதில்
தேவை எனக்கும் ஓர் பங்கு என்றாய்...
படைத்தவனுக்கே பங்காளி ஆனதால்
என்ன வேண்டும் வேறு எனக்கு!