கவிதைக்கு ஒரு கடிதம் - சண்முகப் பிரியா
தேடிச் செல்கிறேன்
உன்னை என் நிழலில்
மீளமுடியாமல் தவிக்கின்றேன்
என்னிடமே என்னை தொலைத்ததால்
காதலிக்கின்றேன் என்னை
என்னிடமே நீ இருப்பதால்
என்னை அறியாமல் கண்ணீர்த்துளிகள்
மனதில் உன் நினைவுத்துளி விழும்போது
என்னை அறியாமல் பனித்துளிகள்
கண்ணில் உன் நிழல்படும்போது
நித்தமும் நிழல் போல உன் நினைவுகள்
நீங்காது என்னை தோடர்கின்றது
நீ இருக்கும் திசை நோக்கி
பயணிக்கும் மனதை
திசை மாற்ற முடியாமல்
திக்கு முக்காடிப் போகின்றேன்
அழுகையில் சிரிப்பைத் தொலைத்தேன்
சிரிப்பிலே அழுகையை தொலைத்தேன்
இரண்டிலுமே என்னைத் தொலைத்தேன்
உன்னாலே உன்னாலே