இந்த காதல் எது வரை…..?
காணத் துடித்த கண்களுக்கு
காணும் வரம் தந்தாய்!
பேச நிணைக்கயில்
பேச்சையே தூக்கிச் சென்றாய்…
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் என்றார் வள்ளலார்
உன் நினைவு பற்றிய போதெல்லாம்
வாடுகின்றேன் நான்.
சிவந்த செந்தாமரையாய்
சூரிய ஒளிக்காக ஏங்கி நிற்கின்றேன்
இயன்றவரை உன் நினைவுகளை
அக்கதிரொளியில் பொசுக்கிடவும் நிற்கின்றேன்.
இனம் பிரிக்கத் தெரியாமல்
இம்சையாய் இருக்கின்றன
இருட்டில் ஒளிரும் மங்கொளியாய்
உன் நினைவுகள்
சிறகடித்து பறந்து கொண்டிருந்த என்னை
சிறகொடித்து நிற்க்கச் செய்தாயே
சீரான என் பாதையை
சிக்கலாக்கிச் சென்றாயே
சிறு முள்ளால் என் மனதை
சுக்கு நூறாக்கிச் சென்றாயே
இன்னும் எத்தனை கூரிய முனைகளை
என் மீது வீசப்போகிறாய்
என்னை உன் கண்களால்
வசீகரிக்க……..