(Reading time: 2 - 3 minutes)

உன் நட்பு… - சுந்தர்

Un natpu

நட்பு என்னும் நந்தவனத்தில் பூக்கும் பூக்களில் ஒருசிலவை மட்டும் தான்

மணம் மாறாமல் மனதோடு ஒன்றிக்கொள்ளும் அதில் நீயும் ஒன்று…..

தாயின் கருவறையில் காணா சுகத்தை….

தந்தையின் தோள்மீது காணா சுகத்தை….

சகோதரியின் மடியினில் காணா சுகத்தை….

கண்டுகொண்டேன் உன்னோடு… உன் நட்போடு….

என் தனிமைக்கும் தனிமையை காட்டினாய்…

உன் இடைவிடாத பேச்சால் மறந்து விட்டேனடா

கவலை என்ற ஒன்றை உன்னால்….. உன் நட்பால்….

தோற்று போவோம என்று தெரிந்தும் விட்டு கொடுத்தாய்

வெற்றி பெறுவது நான் என்பதால்…..

கண்ணீரும் தித்திக்கிறது நண்பா…..

தோல்விகளின் போது தோள் சாய நீ இருப்பதால்…….

தோல்விகளின் போது தோள் கொடுத்தும்……

தடுமாற்றத்தின் போது தட்டி கொடுத்தும்…..

தவறுகளின் போது மன்னித்தும்…….

நுpலை நிறுத்துகிறாய் உன்னையும்…. உன் நட்பையும…..

கவலையோடு வந்த என்னை கவலை மறக்க செய்தது உன் நட்பு…..

காலங்கள் கடந்து சென்றாலும் கண் இமைகள் போல் இணைந்தே

இருப்போம் நம் நட்போடு…….

நான் கேட்டும் கிடைத்தது சில….

நான் கேட்காமலே நீ கொடுத்தது பல…….

சொர்க்கம் - நரகம் நம்;பிக்கையில்லை…..

நீ இருக்கும் இடம் எங்களுக்கு சொர்க்கம்;;…..

நீ இல்லாத இடமெல்லாம் எங்களுக்கு நரகம்……

உடலால் வேறுபட்டு உயிரால் ஒன்றிணைந்து

உயர்வாய் உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பது

நம் நட்பு…..

நாம் மீண்டும் பிறக்க வேண்டு;ம்

ஒன்றாகவே இறக்க வேண்டும்…..

என்ற வேண்டுகோளுடன் என்றும் உன் நண்பண்…….

{kunena_discuss:779}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.