என் அம்மா - சந்தியா
என் உயிர் தோழியடி
எனது அம்மா……
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நிமிடமும்
எனக்காக நேசிப்பவளடி……
நித்தம் நித்தம் உருகும்
மெழுகுவர்த்தி போல
இன்று நிற்கதியாய்
நிற்கிறாயடி எனக்காக……
நான் என்ன செய்து
விட்டேன் உ னக்காக……
அம்மா என்ற ஒற்றை
சொல் அன்பை தவிற……
ஆனால் அவளோ
போதுமடி என் கண்ணே
இந்த ஒற்றை சொல்……
நின்று விட்டது எனது
நெஞ்சுக்குள் என்று……!
{kunena_discuss:779}