கடற்கரை பொழுதினில் – இளையரசி
எல்லைகள் தேடி எட்டி பார்க்கிறேன் ...
வானம் தீண்டி
செல்கிறாள் அவள் ..
அருகில் சென்று தான் தொட்டு பார்க்கிறேன்
பாதம் தீண்டி தான்
ஸ்பரிசிக்கிறாள் ..
காற்றை தென்றலாய் கவிதை
திரிகிறாள் ..
தரையில் மணலை தான்
மெத்தை ஆக்கினாள்..
தென்றல் பிள்ளையை
தினமும் பெறுகிறாள் ...
உன்னை தேடியே பயணம் செய்கிறோம் ..
மாலை பொழுதினில் மயங்க செய்கிறாய் நீ .....
{kunena_discuss:779}