மனமறிய ஆவல் - இந்துமதி
நண்பன் என்று வந்தாய்
நல்வழி காட்டினாய்....
தமையனாய் மாறி
மனஆறுதல் தந்தாய்....
முகமாற்றம் கண்டே
மனமாற்றம் அறிந்தாய்..
உன் மனம் காண விழைகிறேன்...
துயர் துடைக்கத் துடிக்கிறேன்...
வழி தெரியாது தவிக்கிறேன்....
எந்நாளும் நலம் வாழ
மனதிலே மருகினேன்..
என்ன உறவடா கண்ணா...
நிலைத்திட நினைக்கிறேன்...
எப்பொழுதும் உன் தோழித்தங்கையாய்....
மனம் வருடும்
மயிலிறகாய்....
{kunena_discuss:779}