கண்ணீர் துளிகளுடன் - அப்துல் காதர் ஹசனி
சென்னை....
தமிழகத்தின்
மூச்சு குழல் !
மூச்சு குழலில்
தண்ணீர் புகுந்து விட்டது !
சென்னை...
தமிழத்தின் இரைப்பை!
தமிழ் பந்தத்தின்
எல்லா உறவுகளையும்
உள்வாங்கி செரித்துவிடும்
வலிமை அதற்கு உண்டு!
ஆனால் பெருவெள்ளத்தை
செரிக்க முடியவில்லை
குடல் சரிந்துவிட்டது !
தமிழகத்தின் இதயம்
தண்ணீரில் மூழ்கிவிட்டது!
தமிழ் மக்களின் இதயம்
கண்ணீரில் மூழ்கிவிட்டது !
வெள்ளம் தின்ற பிணங்கள்
செரிக்காமல் பாதியாய்
வீதியில் மிதக்கிறது.!
உயிர்காக்க தப்பிய
ஜனங்கள் கூட்டம்
நிர்கதியாய்
நடுத்தெருவில் வதைகிறது !
உறவை தேடி
ஒதுங்கி வரும் பிணங்கள் !
பிணங்களை தேடி
ஓடிவரும் மனங்கள் !
வெள்ள வேட்கைக்கு முன்
கொடி மதிப்பெல்லாம் தெரு கோடியில் !
லட்ச மதிப்பெல்லாம்
அவ லட்சணமாய் !
பிரபலங்கள் கூட தத்தளிக்கிறார்கள்
ஆம் !
தண்ணீர் தன்னை தவிர பிற பலங்களை
அனுமதிக்கவில்லை.
பீகாரில் புயல் வந்தது
உறங்க மறக்கவில்லை
அஸ்ஸாமில் வெள்ளம் வந்தது
உண்ண மறக்க வில்லை !
ஒடிசாவில் புயல் வந்தது !
ஓய்வெடுக்க தயங்க வில்லை !
ஏன் தெரியுமா ?
அங்கெல்லாம்
என் உறவு சாகவில்லை !
என் உயிர் போகவில்லை !
என் உடல் நோகவில்லை !
வீரியம் தெரியவில்லை !
வேதனை புரியவில்லை !
முதல் முறையாக
ஒரு முடிக்க தெரியாத
கவிதை எழுதுகிறேன்
சொல்ல முடியாத சோகத்தில்
என் பேனா புதைந்து விட்டது.
{kunena_discuss:779}