கவிதை - உன்னோடு இருந்த நாட்கள் - முஹம்மது அபூதாஹிர்
அன்பே
பூக்கள் எதுவும் பேசியதில்லை
உன்னைத் தவிர !
அருகில்
பலர் இருந்தாலும் தனிமையையே உணர்கிறேன்
நீ இங்கே என்னுடன் இல்லாததால் !
முள்ளாய் குத்திய
என் வாழ்க்கைப் பாதையில்
அழகியப் பூவாய் வந்தவள் நீ !
புயலடித்த
என் வாழ்க்கையில்
ஒதுங்க அமைதித் தீவாய் வந்தவள் நீ !
உன்னுடன் இருந்த
நாட்கள் எல்லாம்
என் கண்ணுடன் இருக்கிறது!
நீ என்னுடன்
தினமும் இருப்பது போல
எனக்கு கனவுகள் வருகிறது !
நிலவே இறங்கி
நிலத்தில் என்னுடன்
நடந்து வந்தது !
அது பெண்ணாக
பூமியில் பிறந்து வந்தது !
நீ அன்பென்னும்
அலை கடலின் தண்ணீர் !
நீ என்னை கைப்பிடித்த நாள்
எனக்கு வந்தது ஆனந்தக்கண்ணீர்!
வானவில் தோன்றியப் பக்கம்
உனது வண்ணமுகம் பார்த்தேன் !
தென்றல் வீசிய திசையில்
உனது காலடி ஓசைக் கேட்டேன்
ரோசா மலர் சிரிக்க
தண்ணீர் துளிகள் தெறித்தது
கடும் உரைப்பனி வீசிய நேரத்தில்!
பாச மலர் நீ சிரிக்க
உன் ஆனந்தக்கண்ணீர் தெறித்தது என் மேல்
உன்னுடன் பேசிய நேரத்தில் !
ஆழிய கடலின்
அலைகளின் மொழியை
உன்னுடன் அளவளாவியப் பின்
நான் அறிந்தேன்!
அகராதியில் படித்த
வார்த்தைகள் அனைத்தையும்
உன்னைப் பார்த்தப்பின்
நான் மறந்தேன்!
மலர்கள் அனைத்தும்
உன்னை அடைய யுத்தம் செய்து
ரத்தம் வந்தது !
வாள்கள் எல்லாம்
உன்னை நெருங்க முனைய
முனைகள் உடைந்து
வாசனை வந்தது!
முடிந்த தேதிகளை
நான் கிழித்தப் பின்பும்
உன்னுடன் கழித்த நாட்கள் மட்டும்
என்னிடமே திரும்பி வந்தது !
எதிர்வரும் நாட்களோ
உன்னை வரவேற்ப்பதற்காக
என்னிடமே விரும்பி வந்தது !
{kunena_discuss:779}