கவிதை - வாழ்க்கை - முஹம்மது அபூதாஹிர்
கொஞ்ச நாட்கள்தானே
வாழ்க்கை,
கொஞ்சிப் பேசிவிட்டு போங்கள்!
சில நாட்கள்தானே
வாழ்க்கை,
சிரித்து பேசி விட்டுப் போங்கள் !
பிரச்சினை
என்னவாகத்தான் இருந்தாலும்
பிரிவு அதற்க்கு தீர்வல்ல !
கொள்கையில் வேறுபாடு இருக்கலாம்
அதற்க்கு
கோபம் முடிவல்ல !
பிறந்தவர்கள் யாரும்
நிரந்தரமாக
இங்கு இருந்ததில்லை!
மறைந்தவர்கள் இருந்தக் காலத்தை விட
அவர்கள்
இறந்துப் பல ஆண்டுகள் ஆகி விட்டன !
சொற்பக் கால
வாழ்க்கை !
அற்ப சண்டைகள் ஏன் !
புண் ஏற்பட்டால் கூட
ஆற்றி விடலாம் !
மனம் புண்பட்டால்
புற்றுநோய் மாதிரி !
பிறரால்
நம் உடலில் செந்நீர் கூட,
பீறிட்டு வரலாம்!
ஆனால்
நம்மால் பிறர் கண்ணில்,
நீர் கூட வரக்கூடாது!
நமக்கு
எதுவும் கிடைக்காமலே போகட்டும்!
நம்மால்
பிறருக்கு எதாவது நன்மை
கிடைக்கட்டும் !
மகிழ்ச்சியான தருணங்களை
கொடுப்பினையாக
எடுத்துக் கொள்ளுங்கள்!
கஷ்டமான தருணங்களை
படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள் !
{kunena_discuss:779}