கவிதை - இர்ரீவர்ஸ்சபிள் ரியாக்சன் - ஷக்தீ
இர்ரீவர்ஸ்சபிள் ரியாக்சனாய் இரண்டற கலந்தபின் வந்த கேள்வி.
நீயற்ற ஒரு தேசத்திற்கு எந்த ரெயில் என்னை அழைத்துச் செல்லும்?
நீ சுவாசிக்காத காற்றை எந்த வளிமண்டலம் தந்து வைக்கும்?
நீ நினைவுக்கு வராத பாடல்வரிகள் தரும் கவிஞன் யார்?
நீ நிழலாய் துரத்தாத சாலை எது?
நீ நாயகனாய் தோன்றாத ஒளிச்சித்திரம் எது?
{kunena_discuss:779}